தமிழகத்தில் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: செங்கோட்டையன்!

தமிழகத்தில் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என செங்கோட்டையன் தெரிவிப்பு!!

Last Updated : May 27, 2019, 10:22 AM IST
தமிழகத்தில் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: செங்கோட்டையன்! title=

தமிழகத்தில் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என செங்கோட்டையன் தெரிவிப்பு!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுமார் 35,414 தொடக்கப்பள்ளிகள், 9 ஆயிரத்து 708 நடுநிலைப்பள்ளிகள், 17,000 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு கடந்த மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 10 நாட்களுக்கு முன்கூட்டியே இந்த ஆண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை எழுந்துள்ளது. வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டதால், கோடைவிடுமுறை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்றும், ஜூன் 3 ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்திருந்தது.

இதை தொடர்ந்து, கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என பல செய்திகள் வெளியாகி மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்திய நிலையில், தமிழகத்தில் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்; பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வாய்ப்பில்லை என்றும், முன் கூட்டியே அறிவித்தப்படி எந்த மாற்றமும் இன்றி ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். 

 

Trending News