தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது.
கோடை மழை அடுத்த சில நாட்களும் தொடரும் என்று வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் பகல் நேரங்களில் அனல் காற்றின் தாக்கமும் அதிகமாக இருக்கும். சென்னையில் 107 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு. 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.