)
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர் நாளை மற்றும் நாளை மறுதினம் இரு தினங்கள் அதிமுக பொதுச் செயலாளர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மக்களை சந்தித்து உரையாற்றுகிறார் என தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த கேபி முனுசாமி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நல்ல சிந்தனையாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர், என எப்போதும் நம்புகிறேன், அவர் எம்ஜிஆர் குறித்து விமர்சனம் செய்திருக்கக் கூடாது, யார் இல்லை என்று வந்தாலும் உடனடியாக உதவி செய்யக்கூடிய எட்டாவது கொடை வள்ளல் எம்ஜிஆர், அவரைப்பற்றி பேச சற்று சிந்தித்து இருக்க வேண்டும், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதான பாசத்தின் காரணமாக இதுபோன்ற கருத்துக்களை திருமாவளவன் கூறுகிறார், இனிமேல் இது போன்ற கருத்துக்களை தவிர்க்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சியில் நான்கரை ஆண்டுகளில் கூறும் கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது, தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் எத்தனை தொழிற்சாலைகள் கொண்டு வந்து பொருளாதார வளர்ச்சியை பங்கெடுத்து உள்ளனர், என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும், என கேள்வி வைக்கிறேன். தமிழகத்தில் பொருளாதாரம் மேம்பட தொழிற்சாலைகளை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான், அந்த அடிப்படையில் தான் தமிழகத்தில் தற்போது பொருளாதாரம் மேம்பட்டு உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் ஐந்தரை லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர், இதில் பெருமை பேச ஸ்டாலின் அவர்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை, பொருளாதார வளர்ச்சியில் பெருமை கொள்ளக்கூடிய இயக்கம் அதிமுக தான்.
மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு ஏற்று கொண்டு இருந்தால் பல்லாயிரக்கணக்கான சிறு தொழில் செய்பவர்கள் வங்கியில் மிகப்பெரிய அளவில் கடன் பெற்று இருப்பார்கள். தமிழகம் தற்போது விழிப்புணர்வு பெற்றுள்ளது, அதை மறைத்து 60 ஆண்டுகால முன்பு உள்ள நிலையை திமுக பரப்பரை செய்கிறது, தமிழகத்திற்கு கல்வி நிதியைத் தவிர மத்திய அரசு வேறு எந்த நிதியாவது கொடுக்கவில்லை என திமுகவால் கூற முடியுமா. ஆனால் அதிமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு 63 ஆயிரம் கோடி பெற்று தந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என குறிப்பிட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ