திருவள்ளூர்: வெடிகுண்டு வீசி 2 வாலிபர்கள் கொலை!

திருவள்ளூர் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Last Updated : Dec 21, 2019, 03:18 PM IST
திருவள்ளூர்: வெடிகுண்டு வீசி 2 வாலிபர்கள் கொலை! title=

திருவள்ளூர் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் இன்று காலை 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பன்னூரில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சென்றுக்கொண்டு இருந்த போது இவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கும்பல் வந்துள்ளனர்.

அந்த 10 பேர் கும்பல் திடீரென 2 வாலிபர்கள் மீதும் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். பயங்கர சத்தத்துடன் வெடித்த நாட்டு வெடிகுண்டுகளால் 2 வாலிபர்களும் நிலைகுலைந்து சாலையில் விழுந்தனர். அப்போது மர்ம கும்பல் அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினர்.

இதில் 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர். இந்த கொடூர கொலை அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. வாலிபர்களை கொன்ற கும்பல் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்ப முயன்றபோது அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர்.

ஆனால் மர்ம கும்பல் அரிவாளால் அந்த வாலிபர்களை மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் போலீஸ்கள் விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட வாலிபர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

கொலை கும்பல் சுங்குவார்சத்திரம் பகுதியில் இருந்தே 2 வாலிபர்களையும் பின் தொடர்ந்து வந்துள்ளனர். எனவே அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகின்றனர்.

Trending News