Tirunelveli Crime News: நெல்லையில் பயிற்சிக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெண்களை குறி வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவந்த கராத்தே மாஸ்டர் சிக்கினார். அவர் சிக்கியது எப்படி என்பதை இங்கு காணலாம்.

Tirunelveli Crime News: திருநெல்வேலி மாவட்டம் நரசிங்கநல்லூர் பொன்விழா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் வகாப். 37 வயதான இவர் கராத்தேவில் டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளார்.
இதையடுத்து, பேட்டை, சுத்தமல்லி, கோடீஸ்வரன் நகர் பகுதிகளில் கராத்தே வகுப்புகளையும், பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் கராத்தே மட்டுமின்றி துப்பாக்கிச் சுடுதல் வகுப்புகளையும் இவர் நடத்தி வருகிறார். இவரிடம் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் பயிற்சிக்காக வருகின்றனர்.
அப்துல் வகாப் பல பேரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியிருக்கிறார். தனது பயிற்சி மையத்திற்கு வரும் மாணவிகளின் தாய்மார்களை மட்டும் அவர் குறிவைத்திருக்கிறார். அவர்களிடம் தொடர்ந்து ஆசை வார்த்தைகளை கூறி அத்துமீறி உள்ளார். தன்னிடம் சேரும் மாணவிகளில் சிலரின் தாயாரையும் மட்டும் அவர் தேர்ந்தெடுப்பாராம், அதாவது தனது திட்டத்தை யாரிடம் எளிதாக சாமர்த்தியமாக நிறைவேற்றிக்கொள்ளலாம் என்பதை அறிந்து அவர்களிடம் அத்துமீறியிருக்கிறார். அந்த பெண்களிடம் தொலைப்பேசி எண் பெற்று அவர்களிடம் மணிக்காக போனில் பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் ஒருவரின் மகளும் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். அந்தச் சிறுமியை பயிற்சிக்கு கொண்டு விடுவதையும், திரும்பி அழைத்துச் செல்வதையும் அவரின் தாயார் பழக்கமாக கொண்டுவந்துள்ளார். அப்போது, கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப்பிற்கும் அந்த சிறுமியின் தாயாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இவரும் தொடர்ச்சியாக தொலைப்பேசியில் பேசிப் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப், அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பாலியல் ரீதியாக அத்துமீறியது மட்டுமின்றி தனியாக இருப்பதை வீடியோ பதிவாகவும் அவர் எடுத்து வைத்துள்ளார்.
ஒருகட்டத்தில் இவர்களின் பழக்கம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்துள்ளது. டீக்கடை மாஸ்டரான அவர் தனது மனைவி கடுமையாக கண்டித்துள்ளார். இதனால், அந்த பெண்ணும் அடுத்து கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப் உடன் தொலைப்பேசியில் பேசுவதையோ, பிற வகையிலோ தொடர்பு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். ஆனாலும் அப்துல் வகாப் தொடர்ந்து தொந்தரவு செய்தது மட்டுமின்றி ஒரு கட்டத்தில் பெண்ணின் வீட்டுக்கே நேரடியாக சென்றும் தொந்தரவு செய்து வந்துள்ளார். தனக்கு ஆசைக்கு இணங்க மறுத்ததால் அந்த பெண்ணை அச்சுறுத்தி உள்ளார். அப்போது அந்த பெண் சத்தமிடவே பக்கத்துவீட்டார் உடனே ஓடி வந்ததை பார்த்து அப்துல் வகாப் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
அப்துல் வகாப் வீடு வரை வந்து அச்சுறுத்தியதால் அந்த பெண், சுத்தமல்லி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அப்துல் வகாப் புகார் அளித்த பெண்ணை போல் சுமார் 8 பெண்கள் வரை பாதிக்கப்பட்டிருப்பதும் இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் சில பெண்கள் அப்துல் வகாபால் பாதிக்கப்புக்குள்ளாகி தங்களின் வாழ்க்கையை இழந்ததாகவும் கூறப்படுகிறது. அப்துல் வகாப் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அப்துல் வாகபை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ