)
Tirunelveli Honour Killing Case: நெல்லையில் கவின் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கடந்த ஜூலை 27ஆம் தேதி திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் சரகம், கேடிசி நகர் மங்கம்மாள் சாலை, அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் வைத்து தூத்துக்குடி மாவட்டத்தினைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (27) என்பவர் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், பாளையங்கோட்டை மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த சுர்ஜித் (23) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணன் இன்று (ஜூலை 30) கைது செய்யப்பட்டுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவியான செல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் கவின் சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கவின் சிறுவயதில் இருந்தே நெல்லை கேடிசி நகர் பகுதி அருகே உள்ள அஷ்டலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வரும் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகளான பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளார்.
பொறியாளர் கவின் தனது தாய் மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத போதெல்லாம் சித்த மருத்துவரான தனது தோழி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதேபோன்று ஜூலை 27ஆம் தேதி பிற்பகல் கவின் மற்றும் அவரது தாய் ஆகியோர் உடல்நிலை சரியில்லாத அவரது தாத்தாவை மருத்துவம் பார்ப்பதற்காக தனது தோழியின் சித்த மருத்துவ நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கே வந்த சித்த மருத்துவரின் தம்பி சுர்ஜித் என்பவர் கவினிடம் தனியாக பேச வேண்டுமென அழைத்துச் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து கவின் மற்றும் சுர்ஜித் ஆகியோர் பேசிக்கொண்டிருக்கும் போது தனது சகோதரியுடன் ஆன பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை கொடூரமாக வெட்டி ஆணவக் கொலை செய்துவிட்டு பின்னர் காவல் துறையில் வேலை பார்க்கும் தனது பெற்றோர் துணையுடன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 28ஆம் தேதி சரணடைந்தார்.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் குற்றவாளியின் தாய் மற்றும் தந்தைய கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்குவோம் என கடந்த 2 நாள்களுக்கும் மேலாக போராடி வந்த நிலையில், தற்போது குற்றவாளியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் தாயாரும் காவல் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரையும் கைது செய்ய வேண்டும் என கவினின் பெற்றோர் தரப்பு கூறி வரும் நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ