)
Tirunelveli Kavin Case Latest Update Pa Pa Mohan : தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐ.டி இளைஞர் கவின். பட்டியலின சமூகத்தை சேர்ந்த இவர், சென்னையில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று, நெல்லை கே.டி.சி நகரில் இவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
கவின் ஆணவக்கொலை:
கொலையான கவினும், நெல்லையை சேர்ந்த சித்த மருத்துவர் சுபாஷினியும் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்த, சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், கவினை ஜூலை 27 அன்று தனியாக அழைத்து சென்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளான். அதன் பிறகு, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தான். இவன் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.
தன் சகோதரி, மாற்று சமூகத்தை சேர்ந்த கவினுடன் தனக்கு பிடிக்கவில்லை என்பதால் தான் அவரை கொலை செய்ததாக சுர்ஜித் கூறினான். இதனால், இந்த கொலை வழக்கு ஆணவக்கொலை வழக்கானது. இதைத்தாண்டி, சுர்ஜித்தின் தாய் தந்தையரும் காவல் துணை உதவி ஆய்வாளர்கள் என்பதால் அவர்கள் தூண்டுதலின் பேரில் சுர்ஜித் கொலை செய்திருப்பதாக கவினின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.
பெற்றோர் பாேராட்டம்:
கவினின் கொலை வழக்கானது, இப்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார். சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டுமென கவினின் பெற்றோர் போராட்டம் நடத்தினர். 5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கவினின் உடலை பெற்றோர் வாங்கிகொண்டனர்.
சுபாஷினி, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தானும் கவினும் உண்மையாக காதலித்ததாகவும் இதில் தன் பெற்றோருக்கு தொடர்பு இல்லை என்றும் கூறினார். இது இன்னும் பல குழப்பங்களுக்கு வழி வகுத்தது.
தாமாக வந்து விசாரிக்கும் உயர்நீதிமன்றம்:
மதுரையை சேர்ந்த வழக்கறிஞரான செல்வகுமார், கவின் வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் முறையிட்டார். உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் S.M சுப்பிரமணியம் மற்றும் மரிய கீளார் அமர்வு முன்பு முறையிட்டார். மேலும், கவினின் ஆணவப்படுகொலை குறித்து பேசிய அவர், இவற்றை நிரந்தரமாக தடுக்கும் வகையில் நீதிமன்றம் தானாக முன்வந்து (SUMOTO) வழக்கு விசாரணையாக எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
கவின் வழக்கை கையில் எடுக்கும் வழக்கறிஞர்..
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலையை தமிழ் நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். அந்த வழக்கை தற்கொலை என்று கூறி, SC/ST Act-ன் கீழ் பதியவில்லை. இதில், அவரது தாய் சார்பாக வழக்கறிஞர் பா.பா.மோகனை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில், குற்றவாளி யுவராஜ்க்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க பெரும் காரணமாக இருந்தவர், பா.பா.மோகன்தான். இப்போது, கவினின் கொலை வழக்கையும் அவர் எடுத்து வாதிடப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டவர்கள், இனியாவது கவினுக்கு தகுந்த நியாயம் கிடைக்கும் என்று கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ