)
Tiruppur Dowry Death Case : திருப்பூரை சேர்ந்த 27 வயது பெண் ரிதன்யா, வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பத்தில், அவரது தாய்-தந்தை கதறும் காட்சிகளும் மக்களை பெரிதாக பாதித்துள்ளது. இதையடுத்து, உயிரிழக்கும் முன்பும், திருமணத்திற்கு பின்பும் ரிதன்யாவிடம் ஏற்பட்ட மாற்றங்களை அவரது தாயார் கூறியிருக்கிறார்.
உயிரிழந்த ரிதன்யா:
27 வயதான ரிதன்யாவுக்கும், கவின்குமார் என்பவருக்கும் ஏப்ரல் மாதம் திருமணம் நடந்துள்ளது. பல நூறு சவரன் நகை, விலை உயர்ந்த கார் என்று பல சீர்வரிசைகளை கொடுத்து அவரை கட்டிக்கொடுத்துள்ளனர். திருமணம் ஆன 20 நாட்களுக்குள்ளாகவே, நள்ளிரவில் ரிதன்யாவின் கணவர் வீட்டில் பிரச்சனை நடந்துள்ளது.
கடந்த ஜூன் 28ஆம் தேதி தனது காரில் மொண்டிபாளையம் கோவிலுக்கு செல்வதாக கூறிய ரிதன்யா, சாலையோரம் காரை நிறுத்தி மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர், உயிரிழப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு 7 வாய்ஸ் மெசஜ்களை அனுப்பியிருக்கிறார். இதை ஆராய்ந்ததில், ரிதன்யா திருமணம் ஆனதில் இருந்து உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்டது தெரிய வந்தது.
வாய்ஸ் நோட்டில் கூறியிருந்தது..
ரிதன்யா தனது வாய்ஸ் நோட்டில், தனக்கு இதற்கு மேல் வாழ பிடிக்கவில்லை என்றும் தன்னால் யாரும் கஷ்டப்பட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். மேலும், தனது தற்கொலைக்கு கணவர் கவின்குமார் மற்றும் அவரது பெற்றோர்கள்தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட நகை, பணம் எங்கிருக்கிறது என்கிற விவரத்தை அதில் தெரிவித்திருந்த அவர், தனது தந்தை-தாய்யிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார்.
தாய் கூறிய விஷயம்..
ரிதன்யாவின் தாய், தனது மகள் இறந்ததை அடுத்து, அவரிடம் திருமணத்திற்கு பின் தெரிந்த மாற்றங்கள் குறித்தும், உயிரிழப்பதற்கு முன் எப்படியிருந்தார் என்பது குறித்தும் பேசியிருக்கிறார். ரிதன்யா, தாயிடம் கூட தெரிவிக்காத சில விஷயங்களை அவரது மாமியாரிடம் தெரிவித்ததாகவும் ஆனால், அந்த மாமியார் நல்லவராக நடந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். தன்னிடம் அனைத்தையும் சொல்லியிருந்தால் அந்த பிரச்சனை அப்போதே முடிந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.
திருமண போட்டோக்களில் எப்படி ரிதன்யா சிரித்துக்கொண்டே இருக்கிறாரோ, அப்படித்தான் இயல்பு வாழ்விலும் இருப்பார். ஆனால், திருமணத்திற்கு பின்பு அந்த சிரிப்பு காணாமல் போய் விட்டது. என் வீட்டில் வேலை செய்பவர் கூட “திருமணம் ஆனால் களையுடன் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவர் முகத்தில் களையே இல்லையே..” என்று கேட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.
ரிதன்யாவின் கணவர், ஐஏஎஸ் படிப்பதாக கூறிக்கொண்டு வீட்டில் பாேனையே நோண்டிக்கொண்டு இருந்ததாகவும் கூறியிருக்கிறார். தனது மகள்தான், அவருக்கு தேர்வு எழுத உதவி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தன் மகள், யாரையாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்துவிட்டால் அவர்களை பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டாள் என்று கூறியிருக்கும் அவர், இதனால்தான் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அவர் யாரிடமும் வாயே திறக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ