CM MK Stalin Election Campaign: தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் முழு முனைப்புடன் நடந்துவருகின்றன. தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் நான்காம் கட்டத்தை ஏப்ரல் 10-ஆம் தேதி தஞ்சாவூரிலிருந்து தொடங்கவுள்ளார்.
திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை
இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி, 'திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கிய இந்தப் பிரச்சாரப் பயணம், முக்கிய மாவட்டங்களில் அதிகப்படியான கவனத்துடன் தனது அடுத்த கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது.'
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் ஏப்ரல் 10 - ஏப்ரல் 12, 2026 பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்கள்! #VoteForDMK pic.twitter.com/y9skTrP7ZN
— DMK (@arivalayam) April 8, 2026
ஏப்ரல் 10 ஆம் தேதி முதல்வரின் நான்காம் கட்டப் பிரச்சாரம் தொடக்கம்
திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஏப்ரல் 10 ஆம் தேதி முதல்வர் தனது 4 ஆம் கட்ட பிரச்சாரத்தை தொடங்குவார். நான்காம் கட்டப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக,
- முதல்வர் ஸ்டாலின் ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தஞ்சாவூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். அப்போது அவர், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் போட்டியுடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பார்.
- ஏப்ரல் 11-ஆம் தேதி, புதுக்கோட்டையில் மாலை 4 மணிக்கும், திருப்பத்தூரில் இரவு 7 மணிக்கும் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 12-ஆம் தேதி, முதலமைச்சர் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்து, பரமக்குடியில் மாலை 4 மணிக்கும், தூத்துக்குடியில் இரவு 7 மணிக்கும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, அந்தந்தத் தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கவுள்ளார்.
திருவண்ணாமலையில் தேர்தல் பிரச்சாரம்
தற்போது திருவண்ணாமலையில் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களில் வாக்காளர்களைச் சந்தித்துத் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரங்களில் அவர் மாநில அரசின் சாதனைகளை எடுத்துரைத்து, கூட்டணிக் கட்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கோரி வருகிறார்.
அனைத்துத் தொகுதிகளிலும் கட்சிக்கு வலுவான ஆதரவு: துணை முதல்வர்
முன்னதாக, தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், திங்களன்று திருவிடைமருதூரில், மாநில அமைச்சரும் கட்சியின் வேட்பாளருமான கோவி. செழியனை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதற்கு முன்னதாக, ஞாயிறன்று புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை தொகுதியிலும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு, திமுக வேட்பாளர் கே.கே. செல்லப்பாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். கடந்த ஒரு வாரமாகத் தான் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது, அனைத்துத் தொகுதிகளிலும் கட்சிக்குக் கிடைத்திருக்கும் வலுவான ஆதரவை நேரில் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | பிறப்புச் சான்றிதழ் முக்கிய அப்டேட்! தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









