TN Assembly Election 2026 : தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்க ராகுல் காந்தி இங்கு வருவது எப்போது என்கிற சந்தேகம் நிலவி வருகிறது.

TN Assembly Election 2026 : வரும் ஏப்ரல் 23ஆம் தேதி, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கட்சித் தலைவர்கள் அனைவரும், தங்களது வேட்பாளர்கள் மற்றும் கட்சியை ஆதரித்து பரவலாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதை எடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எப்போது தமிழகம் வருகிறார் என்பது குறித்த கேள்வி எழுந்து வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026:
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காகவும், முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காகவும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் பொதுவாக ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. இந்த தேர்தலில் பல எதிர்பாராத சிற்பங்கள் நிகழ்வு என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதை எடுத்து மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். பிரதான கட்சியான அதிமுக, எதிர்கட்சியாக இருக்கிறது.
அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள்!
தேர்தலையொட்டி, மக்களிடம் வாக்குறுதிகளை கொடுப்பதிலும், ஆட்சி அமைப்பதிலும் அனைத்து பிரதான கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. திமுக, ஏற்கனவே இருக்கும் தங்களின் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை விரிவாக்கம் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளது. அதேபோல அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அனைத்து இல்லங்களுக்கும் இலவச வாஷிங் மெஷின் கொடுப்பதாகவும், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்திருக்கிறார்.
அதே சமயத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு, ஆடு மேய்ப்பவர்களுக்கு அரசு வேலை, தமிழகத்தை நிர்வகிக்க 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்.
அடுத்ததாக, நடிகராக இருந்த விஜய்யால் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக தொடங்கப்பட்ட தமிழக விபத்து கழகத்தின் தரப்பில் இருந்தும் பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சீர்வரிசை திட்டம், வீட்டில் ஒரு வண்டி இருக்கும் வகையில் பொருளாதாரத்தை உயர்த்துவது, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கூறியிருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு வராத ராகுல் காந்தி!
திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட 23 கட்சி கூட்டணி களம் காண இருக்கிறது. ஏற்கனவே, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடையே விருதாச்சலம் தொகுதியில் வாக்கு சேகரித்தார். இன்னும் பிற வேட்பாளர்களை ஆதரித்தும் தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இன்னமும் தனது கட்சி வேட்பாளர்களுக்காக தமிழ்நாட்டில் வந்து ஆதரவு கேட்காமல் இருக்கிறார்.
முன்னர், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் தமிழ்நாடு தேர்தல் பிரச்சார திட்டம் குறித்த அறிவிப்பானது விரைவில் வெளியாகும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, ராகுல் காந்தி ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருவதாகவும் அப்போது திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிருப்தியா?
காங்கிரஸ் தலைவர்கள் யாருமே, இதுவரை தமிழகத்தில் வந்து பிரச்சாரத்தில் ஈடுபடாதது, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு எழுந்துள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி பிரச்சனைதான் அவர்கள் வராததற்கு காரணமாக இருக்கும் என்பது சில அரசியல் வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த சமயத்தில், திமுக நடந்து கொண்ட விதம், ராகுல்காந்திக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கு சான்றாக, புதுச்சேரி பிரச்சாரத்தின்போது ஸ்டாலினுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்வதை ராகுல்காந்தி தவிர்த்ததை அனைவரும் கூறி வருகின்றனர். இன்னும் சில நாட்களே தேர்தலுக்கு இருக்கும் நிலையில், ராகுல் காந்தி இன்னும் தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்யாதது, அவரது கட்சி வேட்பாளர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முதல்வர் பேச்சுவார்த்தை!
தொகுதி மறுவரையரை மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த நிலையில், இதற்கு தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு நிலை நிலவி வருகிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் தொலைபேசியில் விவாதித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
கேள்வி : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எப்போது நடைபெறுகிறது?
பதில் : தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.
கேள்வி : தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் யார்?
பதில் : மு.க.ஸ்டாலின் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ளார்.
கேள்வி : காங்கிரஸ் எந்த கூட்டணியில் உள்ளது?
பதில் : காங்கிரஸ், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!