)
கரூரில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த சூழலில், இந்த விவகாரத்தில் SIT விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.
வழக்கு மனுக்களை நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா விசாரிக்கின்றனர். தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதம் என்னவென்றால், இந்த விவகாரத்தை பொருத்தவரையில், தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணைக்குழு அதிகாரியை நியமிக்கவில்லை, உயர்நீதிமன்றதான் நியமித்தது. அஸ்ரா கர்க் என்ற மூத்த அதிகாரிதான் செயல்பட்டு வருகிறார். இவர் சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளில் பணியாற்றியவர். எனவே அவரே விசாரணையை தொடர வேண்டும்.
அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருடைய மன வேதனையையும் நாங்கள் அறிந்துள்ளோம். கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழக அதிகாரிஅக்ள். என்வே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற அனுமதிக்கக் கூடாது. சிறந்த அதிகாரியின் கீழ் அமைக்கப்பட்ட அந்த சிறப்பு விசாரணைக் குழுவே இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தொடர வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், நான்கு மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்தீர்களா? பிரேத பரிசோதனைக்கு எத்தனை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர் என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, இந்த சம்பவத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழல் காணப்பட்டது. உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார். முதலமைச்சர் வந்ததும், அருகே இருந்த மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். இதன் காரணமாகவே உடனே பிரேத பரிசோதனை மேற்கொண்டோம் என பதில் அளித்தது.
மேலும், அஸ்ரா கார்க் என்ற அதிகாரியை உயர்நீதிமன்றம்தான் நியமித்தது. தமிழக அரசு அதில் தலையீடவில்லை. அதேசமயம் அஸ்ரா கார்க், ஒரு நேர்மையான அதிகாரி. எனவே இதில் தமிழக அரசை சந்தேகப்பட ஒன்றுமில்லை என தமிழக அரசு வாதம் வைத்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ