Tamil Nadu Government : அனுமதி பெறாத வீட்டுமனைகள் மற்றும் பொதுகட்டடங்களுக்கு அனுமதி பெறுவது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Government : தமிழ்நாட்டில் அனுமதி பெறாத வீட்டுமனைகள் வைத்திருப்பவர்கள், தங்கள் மனைகளுக்கு அனுமதி பெற நல்ல வாய்ப்பு ஒன்றை அரசு கொடுத்துள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 2025-2026-ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் "20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.
வீட்டுமனைகள் அனுமதி பெற உத்தரவு
அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 01.07.2025 முதல் onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, 15.05.2025 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.70 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்ககள், 01.07.2025 முதல் www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது போன்று, மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படா மனைப்பிரிவுகளை வரன் முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்திற்கு பதிலாக 01.07.2025 முதல் 30.11.2025 வரை www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொது கட்டடங்களுக்கான அனுமதி பெற விதிமுறைகள்
பொது கட்டிடங்களுக்கான உரிமம் வழங்கும் நடைமுறையினை எளிமைஆளுமை (SimpleGov) திட்டத்தின் கீழ் எளிமைப்படுத்தி உடனுக்குடன் வழங்குதல்
பொது கட்டிட உரிமம், கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்த சான்றிதழ் மற்றும் மேற்படி சான்றிதழ் வழங்க அனுமதிக்கப்பட்ட நியமனம் பெற்ற பொறியாளர்கள் (Empanelled Engineer) ஆகியவற்றிற்கான செயல்முறைகள் தமிழ்நாடு பொது கட்டிடங்கள் (உரிமம்) சட்டம், 1965 மற்றும் தமிழ்நாடு பொது கட்டிடங்கள் (உரிமம்) விதிகள். 1966 ஆகியவற்றில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு எளிமைப் படுத்தப்பட்டுள்ளன.
பொது கட்டிடம் உரிமம் பெறுவதற்கு பொதுப்பணித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நியமனம் பெற்ற பொறியாளரால் (Empanelled Engineer) கட்டிடத்தின் உறுதித்தன்மைக் குறித்து சான்று (Structural Soundness Certificate) அளிக்கப்பட வேண்டும். கீழ்க்காணும் சேவைகளை தற்போது இணையதளம் (https://www.tnesevai.tn.gov.in/) வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
இ-சேவை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் முறை:
• இ-சேவை இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், பொது கட்டிடங்களுக்கான உரிமத்தினை இணையவழியாக பெற்றுக்கொள்ளலாம். • மேற்படி, கட்டிட உறுதித்தன்மை சான்றிதழில் குறிப்பிட்டுள்ள காலம் வரை அக்கட்டிடத்தின் பொது கட்டிட உரிமம் செல்லுபடியாகும்.
• ஏற்கனவே விண்ணப்பித்து நிலுவையில் இருந்தால், இ-சேவை இணையதளம் வழியாக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
பொது கட்டிடங்களுக்கான உரிமத்தின் காலம் (Validity) முடியும் தருவாயில் இருந்தால் இ-சேவை இணையதளம் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ