)
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ம் தேதி வருகிறது. மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதி போன்றவற்றை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரசார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் வணிகர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இவ்வழிகாட்டுதல்கள் உணவு பாதுகாப்பையும், மக்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்குதலை உறுதி செய்யும் நோக்கத்தோடு அமல்படுத்தப்படுகின்றன.

இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு முன், இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் தொழில்முனைவோரும், விற்பனையாளர்களும் அவசியமாக உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து, உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்த அனுமதி இல்லாமல் தயாரிப்பதை விற்பனை செய்வது சட்டவிரோதமாகும். பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் தூய்மையை கடைபிடிக்க ஹேர் கேப், கையுறைகள் அணிய தவற கூடாது. மக்களின் ஆரோக்கியத்திற்கான பாதுகாப்பு மிக முக்கியம் என அரசு வலியுறுத்துகிறது.

பொது மக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை Tamil Nadu Food Safety Department (TNFSD) வலைதளம், அல்லது மொபைல் செயலி மூலம் பதிவு செய்யலாம். மேலும், 94440 42322 என்ற தொலைபேசி எண்ணிலும், வாட்ஸ்அப் மூலம் புகார்களை அனுப்ப முடியும். இந்த வழிகாட்டுதல்கள் தீபாவளி போன்ற பெரிய பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்க்கும் நோக்கத்துடன் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் அதிகளவில் வாங்கும் இனிப்பு மற்றும் காரசார உணவு பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, மக்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்தல் அரசின் முக்கியப்பணியாக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ