)
Tamilnadu Government : தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்கள் கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும். இதனால் ஏற்படும் ஊதிய இழப்பை சரிசெய்யும் வகையில் தினசரி 800 ரூபாய் ஊக்கத்தொகையும், இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு கொடுக்கப்படும். ஒவ்வொரு வாரமும் இப்பயிற்சி நீங்கள் வசிக்கும் மாவட்டத்திலேயே நடைபெறும். கட்டுமான தொழிலாளர்களுக்கான முதல் கட்ட பயிற்சி செப்டம்பர் 22 ஆம் தேதி ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டு இத்திட்டங்களை தொடங்கி வைத்தனர்.
யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.இதுவரை செய்யாதவர்கள் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள். இப்பயிற்சியில் கொத்தனார், தச்சு வேலை, வர்ணம் பூசுதல், கம்பி வளைப்பு வேலை, பிளாம்பர், மின் பணியாளர் வேலை, வெல்டர், கருமான் கொல்லன், ஏசி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல், மேற்படி தொழில் இனங்களில் பணிபுரியும் சித்தாள்/கூலியாள் உள்ளிட்ட தொழில் இனங்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
கட்டுமான தொழிலாளர்களுக்கான நன்மைகள்
இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான எண்ணற்ற திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும், தொழிலில் திறன்மிக்கவர்களாக இருந்தாலும், தொழில் திறனில் நன்கு அனுபவமுள்ளவராக இருந்தாலும், அவர்களை அடையாளம் காட்டி அங்கீகரிக்கும் வகையில் பயிற்சியளித்து தமிழ்நாடு அரசால் சான்றிதழ் வழங்கப்படும்.
இச்சான்றிதழ் பெறுவதன் மூலம் தொழிலாளர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும், வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். கலைஞர் கைவினைஞர் திட்டத்தின் மூலம் தங்களுக்கு தொடர்புடைய தொழில் துவங்க மானியத்துடன் கடனுதவிகளும் கிடைக்கும். ஒவ்வொரு பணியில் இருப்பரும் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளவது அவசியம். இப்பயிற்சி மிகுந்த பயனுள்ளதாக அமையும். எனவே, இப்பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் திறனை வளர்த்துக்கொள்வதுடன் வாழ்க்கை தரத்தினையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொடர்பு கொள்வது எப்படி?
பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800/- ஊதியம் மற்றும் கட்டணமில்லா சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவையும், பயிற்சியின் நிறைவில் பயிற்சி சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. கூடுதல் தகவல் தேவைப்படுபவர்கள் தாலுகா அலுவலகம், மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ