)
TN Govt Schools Teacher Recruitment 2025 : தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
காஞ்சிபுரம் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி காலிப்பணியிடம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித்தகுதிச் சான்று. ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் (இரண்டாம் தளம்) 30.06.2025 மாலை 5.45-க்குள் ஒப்படைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்வித்தகுதி மற்றும் வயது தற்போதைய நடைமுறைகளில் உள்ள விதிகளின்படி பின்பற்றப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள், இல்லை எனில் மாவட்டத்திற்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (தொகுப்பூதியம் மாதத்திற்கு ரூ.18,000/- கணினி பயிற்றுநருக்கு ரூ.15,000/-)
தமிழ்-1, ஆங்கிலம்-1, கணிதம்-2, இயற்பியல்-1 வணிகவியல்-2, உயிரியியல்-1, பொருளியியல்-1, கணினி பயிற்றுநர்-1- மொத்தம் - 10
12 - பட்டதாரி ஆசிரியர் (தொகுப்பூதியம் மாதத்திற்கு ரூ.15,000/-)
ஆங்கிலம்-3, கணிதம்-2, அறிவியல்-2 சமூகஅறிவியல்-5- மொத்தம் 12
இடைநிலை ஆசிரியர் (தொகுப்பூதியம் மாதத்திற்கு ரூ.12,000/-) 17-பணியிடங்கள்.
பள்ளி வாரியான காலிப்பணியிட விவரங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து விண்ணப்பிக்க வேண்டும்.
கரூர் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி காலிப்பணியிடம்
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் நெய்தலூர் அரசு ஆதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் K.பேட்டை அரசு ஆதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்தினை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நியமனம் செய்ய தகுதி பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணிடத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு (தாள்-1) (TET) Paper-1 தேர்ச்சி பெற்ற நபர்கள் கல்வித்தகுதி சான்றுகளுடன் எழுத்து மூலமான விண்ணப்பங்களுடன் நேரடியாகவோ/ அஞ்சல் மூலமாகவோ 24.06.2025 முதல் 27.06.2025- முடிய கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்துக்கு அனுப்பவும்.
திருச்சி ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி காலிப்பணியிடம்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணாக்கர்களின் நலன்கருதி தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்ய ஆதிதிராவிடர் நல ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடம் விவரம்:
1. முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் நிலையில் - 06 காலிப்பணியிடங்கள்
2. பட்டதாரி ஆசிரியர் நிலையில் -14 காலிப்பணியிடங்கள்
3. இடைநிலை ஆசிரியர் நிலையில் -16 காலிப்பணியிடங்கள் மாதாந்திர தொகுப்பூதியம்:
1. முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் நிலையில் - 18,000/-
2. பட்டதாரி ஆசிரியர் நிலையில் - 15,000/-
3. இடைநிலை ஆசிரியர் நிலையில் -12,000/-
கல்வித் தகுதி மற்றும் முன்னுரிமை:
1. வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்) 2. வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் (TET) 3. இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பட்டியலினத்தவர்க்கு முன்னுரிமை வழங்கப்படும். 4. பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
1. விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ / அஞ்சல் மூலமாகவோ பெற்று உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
முகவரி: மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி.
காலிபணியிட விவரங்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், திருச்சி தனி வட்டாட்சியர் (ஆதிந) அலுவலகம் மற்றும் துறையூர் தனிவட்டாட்சியர் (ஆதிந) அலுவலக அறிவிப்பு பலகையில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
கால வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 26.06.2025 மாலை 05.00 மணிக்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டியது. மேற்படி கால் நிர்ணயத்திற்கு பின்பு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ