)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், லட்சக்கணக்கான தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 3,935 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, இந்ததேர்வு கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த தேர்வில், 200 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக 100 கேள்விகளும், பொது அறிவுப் பிரிவில் 75 கேள்விகளும், திறனறி மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு பிரிவில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.

தேர்வு முடிந்ததை தொடர்ந்து, தேர்வாணையம் கடந்த ஜூலை 21ம் தேதி தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட்டது. தேர்வர்கள் இந்த விடைக்குறிப்பை சரிபார்த்து, அதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், ஜூலை 28ம் தேதி வரை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. பெறப்பட்ட அனைத்து ஆட்சேபனைகளையும் தேர்வாணையம் முழுமையாக ஆய்வு செய்த பிறகு, இறுதி விடைக்குறிப்பை வெளியிடும். இந்த இறுதி விடைக்குறிப்பின் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் அதிகாரப்பூர்வ தேதியை தேர்வாணையம் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், பல்வேறு தகவல்களின்படி அக்டோபர் 2025க்குள் முடிவுகள் வெளியாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. தேர்வர்கள், தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து கவனித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு முடிவுகள் வெளியானதும், தேர்வர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி தங்கள் மதிப்பெண்களை எளிதாக அறிந்துகொள்ளலாம்.
1. முதலில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in-க்குச் செல்ல வேண்டும்.
2. முகப்புப் பக்கத்தில், 'TNPSC Group 4 Result 2025' என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
3. அடுத்த பக்கத்தில், உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற உள்நுழைவு விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
4. ‘Submit’ பட்டனை கிளிக் செய்தவுடன், உங்கள் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் அட்டை திரையில் தோன்றும்.
5. தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து, எதிர்கால தேவைகளுக்காக ஒரு பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில், இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு, காலி பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படுவார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ