)
TNRD Recruitment 2025: தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. துறை வாரியாக பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கீழ் உள்ள காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 8ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கடலூர் மாவட்டத்தில் 5 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதாவது, ஈப்பு ஓட்டுநர் பணிக்கு 4 இடங்களும், இரவு காவலர் பணிக்கு 1 இடங்களும் என மொத்தம் 5 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஈப்பு ஓட்டுநர் பணி அண்ணா கிராமம், காட்டுமன்னார் கோயில், கீரப்பாளையம், நல்லூர் ஆகிய ஒன்றியத்தில் இந்த பணி நிரப்பப்படுகிறது. இரவு காவலர் பணிக்கு நல்லூர் ஒன்றியத்தில் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்படுகிறது.
மேற்கண்ட பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 42 வயதிற்குள் இருக்க வேண்டும். இதில், ஓட்டுநர் பணிக்கு 8ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். மேலும், ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். காவலர் பணிக்கு எந்த கல்வித் தகுதியும் தேவையில்லை. தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தாலே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கீழ் நிரப்பப்படும் ஓட்டுநர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். காவல் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணிகளுக்கு Cuddalore.Nic.In என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். நவம்பர் 20ஆம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழி மூலமாகவோ அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அளித்திட வேண்டும்.
விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, முன்னாள் ராணுவத்தினர், கைம்பெண், மாற்றுத்திறனாளி என அதற்கான ஆவணத்தையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க ரூ.50 செலுத்த வேண்டும்.
ஆணையாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம் - 608301, ஆணையாளர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கீரப்பாளையம், கடலூர் மாவட்டம் - 608601, ஆணையாளர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நல்லூர், கடலூர் மாவட்டம் - 608 302 என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ