)
Case Against TVK Karur District Secretary: தவெக வழக்கறிஞர் அறிவழகன், "கரூரில் நடந்த தவெகவின் மக்கள் சந்திப்பு நிகழ்வின்போது ஏற்பட்ட குளறுபடியால் சுமார் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தி விஜய்யின் இதயத்தை சுக்குநூறாக உடைத்திருக்கிறது. விஜய் தமிழ்நாட்டு மக்களை நேசிக்கக்கூடியவர். இந்தக் கோரமான சம்பவம் அவரின் மனதை பாதித்திருக்கிறது. விஜய் இந்த துயரத்தில் இருந்து மீண்டும் வர வேண்டும்" என்றார்.
பாதிக்கப்பட்டவர்களுடனும், உயிரிழந்தோரின் குடும்பங்களுடனும் தவெக உடன் இருக்கும் என்றும் அடுத்த வார பிரச்சார பயணம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அனைத்து இடங்களிலும் நிபந்தனைகளை முறையாக பின்பற்றியிருக்கிறோம் என்றார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் பங்கேற்று 39 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கரூர் நகர காவல் நிலைய போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக கரூர் மேற்கு மாவட்டக் கட்சி செயலாளர் வி.பி. மதியழகன் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு என முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளது. கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது, அஜாகரத்தையாக செயல்பட்டது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பின் போது, கடுமையாக கூட்டநெரிசல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 30 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனையில் 47 பேரும், தனியார் மருத்துவமனையில் 34 பேரும் என 81 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 6 சிறுவன்கள், 4 சிறுமிகள், 16 பெண்கள் அடக்கம். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கரூருக்கு அவர் சாலை மார்க்கமாக செல்ல இருக்கிறார். அங்கு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் அவர், அவர்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கரூருக்கு அவர் சாலை மார்க்கமாக செல்ல இருக்கிறார். அங்கு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் அவர், அவர்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்க உள்ளார். தற்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ