இதுவரை மக்களை ஏமாற்றிருக்கலாம்.. இனி நடக்காது.. கர்ஜித்த விஜய்!

மக்களுக்காக மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என கோவை பூத் கமிட்டி கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசி உள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Apr 26, 2025, 08:51 PM IST
  • இன்றும் நாளையும் கோவையில் தவெக பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது
  • முதல் நாளான இன்று தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்
இதுவரை மக்களை ஏமாற்றிருக்கலாம்.. இனி நடக்காது.. கர்ஜித்த விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நர்வாகிகள் கூட்டம் இன்றும் நாளையும் கோவையில் நடைபெறுகிறது. இதல் கலந்து கொள்வதற்காக அக்கட்சி தலைவரும் நடிகருமான விஜய் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு அமோக வரவேற்பை கொடுத்தனர். இதையடுத்து ஓட்டலுக்கு சென்ற விஜய் ஓய்வெடுத்துவிட்டு பின்னர் ஓட்டுச்சாவடி முகவர்கள் கருதரங்கம் நடக்கும் இடத்திற்கு பேரணியாக சென்றார். 

இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் முதல் நாளான இன்று மேற்கு மண்டலங்களை சார்ந்த மாவட்டகளான கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சுமார் 7000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய், மக்களுக்காக மக்களின் நலனுக்காக செயலபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், என் நெஞ்சில் குடியிருக்கும் கோவை மக்களுக்கும், தோழர்களுக்கும் வணக்கம். கோவை என்றதும் கொங்கு பகுதி என்றதும் இந்த மண்ணோட மக்களோட மரியாதையுதான் நியாபம் வருது. இந்த கூட்டத்தை பார்ப்பதற்கு வேறு ஒரு விழா போல் இருக்கிறது. பெயர்தான் பூத் கமிட்டி பயிற்சி பட்டறை. இது ஓட்டுக்கான மீட் கிடையாது. என்னடா இவரு இப்படி சொல்லறாருனு நீங்க நினைக்கலாம். 

அரசியல் ஓட்டுக்காக மட்டும் கிடையாது. ஆட்சிக்கு வந்து நாம் என்ன செய்ய போகிறோம் என்பதை சொல்லுங்கள். இதுவரை செய்த மாதிரி நாம் செய்ய போவதில்லை. மக்களுக்காக மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும். அதுதான் தேர்தல். இந்த பூத் பயிற்சி பட்டறை என்பது மக்களிடம் எப்படி ஓட்டு வாங்குவது பற்றியதல்ல. அவர்களுடன் எப்படி ஒன்றிணைய போகிறோம் என்பதை பற்றியது. 

இந்த கோவைக்கு பலர் வந்திருக்கலாம். மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கலாம். இதெல்லாம் செய்து ஆட்சியை பிடித்திருக்கலாம். ஆனால் அது இனி நடக்காது. நடக்க விட போவதும் கிடையாது . நம் கட்சி மீது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவது பூத் ஏஜெண்ட்கள்தான். நீங்கள் போர் வீரனுக்கு சமம். அரசியல் அனுபவம் என்ன இருக்கிறது என மக்கள் கேட்பார்கள். நீங்கள் யார், எப்படிபட்டவர்கள் உங்களுடைய தகுதி என்ன என்பதெல்லாம் எனக்கு தெரியாது. 

நம்மிடம் என்ன இல்லை. மனசுல நேர்மை இருக்கு. கறைபடாத அரசியல் செய்யணும்னு நம்பிக்கை இருக்கு, லட்சியம் இருக்கு. உழைக்கறதுக்கு தெம்பு இருக்கு, பேசுறதுக்கு உண்மை இருக்கு, இதுக்கு மேல என்ன வேண்டும். நம்பிக்கையோட இருங்க, நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம் என பேசினார்.    

மேலும் படிங்க: அரசு மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. மதுரையில் அதிர்ச்சி!

மேலும் படிங்க: சிந்து நதி 30 கோடி மக்களின் வாழ்வாதாரம்.. சீமான் வேண்டுகோள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News