)
கடந்த மே நான்காம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. ஆனாலும் விஜய்யால் தமிழக முதல்வராக தற்போது வரை பதவியேற்க முடியவில்லை. காரணம், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற நிலையில், விஜய்க்கு 108 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்தனர். இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு விஜய்க்கு தேவைப்பட்டது. ஒருசில கட்சிகள் உடனடியாக ஆதரவு தெரிவித்தாலும், ஒருசிலர் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இன்று திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் விஜய்க்கு தங்களது நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளன. இதன் காரணமாக தற்போது 120 எம்.எல்.ஏக்களுடன் விஜய் ஆளுநரை சந்தித்து பதவி பிரமாணம் செய்து வைக்க கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி ஆளுநரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே மூன்று முறை ஆளுநரை சந்தித்த விஜய், தன்னை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரியிருந்தார். ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதனால் இந்த பதவியேற்பு தள்ளிப்போனது. தற்போது 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதால் விஜய் முதலமைச்சராக பதவியேற்க ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி நாளை மதியம் 3:15 மணிக்கு விஜய் முதல்வராக பதவியேற்க உள்ளார் என்றும், அவரோடு இணைந்து 9 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் பதவியேற்பதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த எட்டாம் தேதி இந்த பதவியேற்பு விழா நடைபெறவிருந்த நிலையில், நாளை மே பத்தாம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஜய்யுடன் செங்கோட்டையன் போன்ற ஒன்பது முக்கிய தவெக நிர்வாகிகள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அமைச்சர் பட்டியல் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
கடந்த 2024ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்து, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று முதலமைச்சராக பதவியேற்று வரலாற்றில் இடம்பெற உள்ளார். தனது முன்னோடியாக எம்.ஜி.ஆரை சொல்லிக்கொண்டிருந்த விஜய், அவரையே முந்தி இந்த தேர்தலில் கூடுதலான வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளார். இருப்பினும் அவரால் தனிப்பெரும்பான்மைக்கான 118 இடங்களை பிடிக்க முடியவில்லை. இருந்தாலும், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தற்போது விஜய்க்கு கிடைத்திருப்பதால் அவர் முதலமைச்சராக நாளை பொறுப்பேற்கிறார். அதன்பிறகு திங்கட்கிழமை கோட்டைக்கு செல்லும் விஜய், தனது முதல் கையெழுத்தை இட உள்ளார். நாளை விஜய் முதலமைச்சராக பதவியேற்பதை பார்ப்பதற்கு மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
|
விஜய் எப்போது பதவி ஏற்கிறார் |
நாளை |
|
எங்கு பதவி ஏற்கிறார்? . |
நேரு விளையாட்டு அரங்கம் |
|
எத்தனை மணிக்கு |
மதியம் 3.30 மணி |
| யார் யார் பங்கேற்பு | ராகுல் காந்தி பங்கேற்கலாம் |
1. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?
கடந்த மே 4, 2026 அன்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது.
2. 108 எம்.எல்.ஏ-க்கள் இருந்தும் விஜய்யால் உடனடியாக ஏன் முதல்வராகப் பதவியேற்க முடியவில்லை?
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. விஜய்க்கு 108 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருந்ததால், தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாகக் கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது.
3. தற்போது விஜய்க்கு எத்தனை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது?
காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளதால், தற்போது அவருக்கு 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது.
4. ஆளுநர் ஏன் முதலில் விஜய்யைப் பதவியேற்க அழைக்கவில்லை?
ஆரம்பத்தில் ஆளுநர் தரப்பிலிருந்து, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ-க்கள்) நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதன் காரணமாகப் பதவியேற்பு தாமதமானது.