மீண்டும் சலசலப்பு! தமிழக ஆளுநர் நடத்தும் மாநாட்டை புறக்கணித்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள்!

Tamil Nadu Latest News: தமிழக ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பு எனத் தகவல். அதற்கான காரணம் என்ன? அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 25, 2025, 10:58 AM IST
மீண்டும் சலசலப்பு! தமிழக ஆளுநர் நடத்தும் மாநாட்டை புறக்கணித்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள்!

University Vice Chancellors Conference: உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் பல்கலைக்கழக துணை வேந்தர் மாநாட்டில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லை. மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் இருந்து உதகமண்டலம் சென்ற நிலையில், தனது முடிவை மாற்றி பாதியிலேயே நெல்லை நோக்கி திரும்புவதாக சந்திரசேகர் தகவல் தெரிவித்துள்ளார். என்ன காரணத்தினால் இந்த மாநாட்டை துணைவேந்தர்கள் புறக்கணித்து இருக்கிறார்கள்? தற்போதைய நிலவரம் குறித்து பார்ப்போம்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக அந்த மசோதாக்கள் கிளப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடியாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. மேலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து பல்கலைக்கழங்களுக்கும் துணைவேந்தராக தமிழக முதலமை இருப்பார் எனவும் அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. 

இந்தநிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் இன்று ஊட்டி உதகையில் இருக்கக்கூடிய ராஜபவனில் மாநாடு என்பது நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இதற்காக ஏற்பாடுகளை ஜனவரி மாதமே துவங்கி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேவேந்தர்களுக்கு அழைப்பானது கொடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாகத்தான் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்காரணமாக தமிழக ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவ்ர் சென்றிருந்த நிலையில், இன்று யாரும் அந்த துணை மாநாட்டில் பங்கேற்காதன் காரணமாக அவரும் உதகையில் இருந்து புறப்பட்ட திருநெல்வேலி திரும்பி வந்திருக்கிறார்.

அதேபோல தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு துணைவேந்தர்கள் பங்கேற்காததன் காரணமாகவே தானும் பங்கேற்கவில்லை என அவர் தரப்பில் விளக்கத்தை குறிப்பிட்டிருக்கிறார்கள். இது தமிழக அரசியல் மட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரம் கோவை வேளாண் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தரும் ஆளுனர் நடத்தும் மாநாட்டில் பங்கேற்கவில்லை எனவும் தகவல்.

தமிழகத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 20 பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருக்கிறது. நேரடியாக உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டிலும் இருக்கக்கூடிய இந்த பல்கலைக்கழகங்கள் இத்தனை ஆண்டுகளாக வேந்தராகவே ஆளுநர் இருந்து வந்தார். அதன் அடிப்படையில் தான் ஆளுனர் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஜனவரி மாதம் முதலே செய்து வந்ததாக ஆளுனர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக முதலமைச்சர் இருப்பார் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவை அடுத்து, இவர்கள் பங்கேற்கவில்லை என முதல் கட்டமாக தகவலானது வெளியாகி இருக்கிறது. 

தமிழக ஆளுநர் தலைமையில் நடக்கவிருந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் எத்தனை துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை என்ற முழுமையான அதிகாரப்பூர்வ தகவல் என்பது தற்போதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க - ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு! அன்பில் மகேஷ் உறுதி!

மேலும் படிக்க - திமுகவை வீழ்த்த ஒன்றிணைவோம்... பங்காளி சண்டையை பிறகு போடுவோம் - டிடிவி தடாலடி!

மேலும் படிக்க - ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு: தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் - தொல் திருமாவளவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News