UPSC Exam TN CM MK Stalin Congratulates Sivachandran : இந்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. இதில், தமிழத்தை சேர்ந்த சிவச்சந்திரன் எனும் மாணவர் தமிழகத்தில் முதலிடத்தை பெற்றிருக்கிறார்.
தமிழ்நாட்டு மாணவர் முதலிடம்!
மத்திய அரசு தேர்வாணையம், இந்திய குடிமை பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில், தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் எனும் மாணவர் அகில இந்திய அளவில் 23வது இடத்தை பிடித்தும், தமிழகத்தில் முதலிடத்திலும் தேர்வாகியிருக்கிறார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃபெஸ், ஐஆரெஸ், ஐஎஃபெஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான இடங்களை நிரப்ப, மத்திய பணியாளர் தேர்வாணையம் UPSC தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் நிலைத்தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என 3 நிலை தேர்வுகள் இருக்கின்றன.
இந்த தேர்வானது, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும். இதையடுத்து, கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் நிலைத்தேர்வும், செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வும், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நேர்முகத்தேர்வும் நடைப்பெற்றது.
முடிவுகள் வெளியீடு:
இந்த தேர்வு முடிவுகளை https://upsc.gov.in என்ற தளத்தில் காணலாம். இந்த தேர்வை எழுதியவர்களில் மொத்தம் 1009 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக தரவுகள் கூறுகின்றன. இதில், இந்திய அளவில் முதலிடத்தை, உத்தர பிரதேசத்தை சேர்ந்த சக்தி துபே என்பவர் பெற்றிருக்கிறார். ஹர்ஷிதா கோயல் இரண்டாவது இடத்தையும், டோங்கரே அர்ச்சித் பராக் 3ஆம் இடத்தையும் பிடித்திருக்கின்றார்.
சிவச்சந்திரனுக்கு பாராட்டு!
தமிழ் நாட்டில் இருந்து UPSC தேர்வு எழுதிய மாணவர் சிவச்சந்திரன், இந்திய அளவில் 23வது இடத்தை பிடித்திருக்கிறார். இவர், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் படித்தவர். இவரைப்போல, இந்த திட்டத்தில் பயின்ற 18 பேர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இந்திய அளவில் 39வது இடத்தை பெற்ற மோனிகாவும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்தவர்.
இந்த செய்தி தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் “எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த #நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் #UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!” என்று குறிப்பிட்டிருக்கிறார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | டாஸ்மாக்கில் ரூ.2,489 கோடி கூடுதல் வருமானம்... பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ