)
Tamil Nadu News Latest Updates: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சி இன்றோடு 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இன்று இருக்கக் கூடிய இளைய சமுதாயத்திற்கு, எமர்ஜென்சி காலகட்டத்தில் நாடு எப்படி இருந்தது?, இந்திய ஜனநாயகம் எப்படி இருந்தது என்பது பற்றி எல்லாம் எடுத்துச் சொல்வதற்காக, பாஜக சார்பில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.
Vanathi Srinivasan: திராவிடம் குறித்து வானதி ஸ்ரீனிவாசன்
இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் (Vanathi Srinivasan) கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழில் பெருமையை பேசுவது, முக்கியத்துவத்தை பேசுவது என்பதை பிரதமர் முக்கியத்துவமானதாக பார்க்கின்றார். தமிழ் வளர்ச்சிக்கு துறை இருக்கிறது. இதே போல ஒவ்வொரு மாநிலத்திற்கு மொழிக்கான துறை இருக்கிறது.
முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ் மொழியில் கட்டாயம் கற்பதற்கான சூழ்நிலையை உறுதி செய்ய வேண்டும். பாஜக - அதிமுக கூட்டணி பற்றிதான் கேள்வியா?...கூட்டணியை அறிவிச்சாச்சு... திராவிடம் என்பது ஒட்டுமொத்த தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பு என நாங்கள் நம்புகின்றோம். திராவிடம் என்பது தென்னிந்தியாவின் நிலப்பரப்பு என்ற புரிதல் வேண்டும். திராவிடம் என்ற சிந்தனையை இவர்களாலேயே ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதுதான் எதார்த்தம்.
Vanathi Srinivasan: 'நான் திராவிடர் தான்...'
திராவிடம் என்பது நிலப்பரப்பு. இங்கு வாழக்கூடிய மக்கள் திராவிடர்கள். இது ஒரு தனிப்பட்ட தத்துவமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்கு ஒப்பிடாத இதை எடுத்துக் கொள்ள முடியாது. நான் திராவிடர் தான், இதில் என்ன சந்தேகம். இந்த மேடையில் அமர்ந்திருக்க கூடிய அனைவரும் திராவிடர்கள் தான். கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் என அனைவரும் திராவிடர்கள்தான்.
திராவிடம் என்ற பெயரால் மொழிகளுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துவது, குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவது, இந்து மக்களின் உரிமைகளை இழிவுப்படுத்துவது அல்ல. இந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்கள், எந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழியில் பேசினாலும், திராவிடர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.
Vanathi Srinivasan: 'எங்கள் கூட்டணி பலமாக உள்ளது'
அதிமுக - பாஜக கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. இதை எந்தவித சக்தியாலும் உடைக்க முடியாது. மீண்டும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. சித்தாந்தம் இருக்கிறது, அவரவர் அந்தந்த சித்தாந்தத்தில் தெளிவாக இருக்கிறார்கள். திமுக மீது விடுதலை சிறுத்தைகள் எத்தனை முரண்பாடுகளை வைத்து இருக்கிறார்கள், ஆனால் அனைவரும் கூட்டணியோடு தான் இருக்கிறார்கள். அதைப்பற்றி எல்லாம் யாரும் பேசுவது இல்லை. ஆனால் அதிமுக, பாஜக என்றால் உடனே விரிசல் என குறிப்பிடுகிறீர்கள். திமுக வீட்டுக்கு போவது உறுதி.
Vanathi Srinivasan: 'நாங்கள் மாநாட்டை நடத்தவில்லை'
பாரதிய ஜனதா கட்சி சார்பில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவில்லை, மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறோம். அனைத்து கட்சிகளுக்கும் இந்து முன்னணி அழைப்பு கொடுத்தார்கள். அது போன்று தான் நாங்களும் அதில் பங்கு பெற்றோம். அதில் அவர்களுடைய கருத்துக்களை பகிர்வதில் அவரவரின் விருப்பம். அதை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதே சமயம், இந்து முன்னணியின் கொள்கையை சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. இதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதனால் எங்களுக்கு எந்த முரண்பாடும் கிடையாது. அதிமுக தலைமையில் இங்கு ஆட்சி நடக்கும் என அமித்ஷா கூறி இருக்கிறார். நிச்சயம் கூட்டணி ஆட்சி நடைபெறும்" என்றார்.
Vanathi Srinivasan: போதைப்பொருள் கலாச்சாரம்
நடிகர் ஸ்ரீகாந்த் கைது (Actor Srikanth Arrest) செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, "தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் தலை தூக்கி இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் அதன் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அனைவருக்குமே அதைப் பற்றிய கவலை இருக்கிறது. அரசாங்கமும் அதற்கான விழிப்புணர்வை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதைத் தாண்டி இதற்கு என்று தனியாக, அமைப்புகள் இருந்தாலும் கூட, அவர்கள் இந்த போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்" என்றார்.
Vanathi Srinivasan: தனி மனித தாக்குதல் கூடாது...
அமித்ஷா ஒரு முட்டாள் என்று ஆ.ராசா (A Raja) பேசியது குறித்த கேள்விக்கு, "முன்னாள் மத்திய அமைச்சர் நீலகிரி, பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, எப்பொழுதுமே தன்னுடைய தரக்குறைவான பேச்சின் மூலம் கவனத்தை ஈர்ப்பவர். மத்திய அமைச்சரை மிக தரக்குறைவாக விமர்சித்து இருக்கிறார்.
இதை நாங்கள் கடுமையாக வன்மையாக கண்டிக்கிறோம். அரசியல் ரீதியாக ஆட்சி ரீதியாக எந்தவித விமர்சனத்தை வேண்டுமானாலும் முன் வைக்கலாம். ஆனால் தனி மனித விமர்சனத்தை முன்வைக்க கூடாது. இதைத் தொடர்ந்தால் எங்களுடைய தொண்டர்களின் விமர்சனங்களை யாராலும் தடுக்க முடியாது" என பதலளித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ