)
சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் வெளியே மண்டலம் 5, 6-ன் தூய்மைப் பணி தனியார்மயமாவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்து சுமார் ஒரு மணி நேரமாக போராட்டத்தின் நிலை, சூழல் குறித்து கேட்டறிந்தார்.
விஜய் நேரடியாக வருவதாக இருந்தது
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடனான சந்திப்புக்குப் பின்னர் உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் கு.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கடும் வெயில், மழையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நேற்றிரவு நேரடியாக வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். அவர் வருவதன் காரணமாக போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு போராட்டம் சிக்கலுக்குள்ளாக கூடாது என்பதன் அடிப்படையில் அவரை சந்திக்க வந்தோம். தவெக தலைவர் விஜய் மட்டுமல்லாது அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரடியாக சந்தித்துள்ளோம்..
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் வெற்றிப் பெறுவதற்கு தமிழக வெற்றிக் கழகம் பக்கபலமாக துணை நிற்பதாக விஜய் கூறியுள்ளார். சட்ட உள்ளிட்ட தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக நின்று செயல்படும் என விஜய் கூறினார். அதற்காக எங்கள் இயக்கம் சார்பில் அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். சிறை, கைது என எத்தகைய சூழல் வந்தாலும் தனியார்மயத்திற்கு எதிரான அரசு வேலை வேண்டும் என்கிற எங்களது கோரிக்கை போராட்டம் தொடரும்.
2000 தொழிலாளர்களை அடமானம்
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளதாகவும் கடினமான சூழலில் தூய்மை பணியாளர்களை சந்திப்பதாகவும் விஜய் கூறினார். இதுகுறித்து சிந்தித்து வருவதாகவும், ஆழ்ந்த கவலையும் எங்களை வெளிப்படுத்தினார். தூய்மை பணியாளர்கள் உடன் இயல்பாக உரையாடியதோடு, கோரிக்கைகளையும் விஜய் கேட்டறிந்தார். தொடர்ந்து போராட்டத்திற்கு உடன் இருப்பதாகவும் கூறினார்.
7 கட்ட பேச்சுவார்த்தையில் தனியாருக்கு வேலைக்கு செல்ல வேண்டும், இடத்தை காலி செய்ய வேண்டும் என்கிற அரசின் பேச்சுவார்த்தை குறித்தான சாராம்சங்களை கேட்டறிந்தோம். மனிதர்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் போதுதான் ஒரு இல்லத்தில் சென்று சாப்பிட்டேன் என்பதனை பெருமையாக கூறுவர். கழிப்பறை திறந்து வைப்பதையெல்லாம பெருமையாக கூறுகின்றனர். ராம்கி நிறுவனத்தில் 2000 தொழிலாளர்களை அடமானம் வைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணமாக உள்ளது என்பது குறித்து விஜய்யிடம் கூறினோம்
விஜய்யை சந்திக்க வந்தது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சங்க முன்னணியினர்களுக்கு தெரியும். எனவே, அதுகுறித்து எல்லாரிடமும் தெரிவிக்கவும் முடியாது. எல்லாரின் விருப்பத்தின் பேரில்தான் கட்சித் தலைவர்களை சந்திக்கிறோம். அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்திக்கிறோம். மண்டலம் 5,6 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறுவது முழுக்க முழுக்க பொய் தகவல். நாங்கள் வெளிப்படையாக உள்ளோம்.
சேகர்பாபு திமுகவுக்கு எதிராக செயல்படுகிறார்
25% வேலைக்கு வந்துள்ளதாக தகவலை பரப்பி பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். திமுக கவுன்சிலர் உடன் இருக்கும் ஒரு சிலர் தூய்மைப் பணியாளர்கள் இல்லாத போதிலும் அவ்வாறு செல்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டாலும் தூய்மை பணியை மேற்கொள்வதாக கூறுகிறோம். மாநகராட்சி தரப்பு அதனை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. போராட்டத்தை உடைக்க குறுக்கு வழியில் அரசு செயல்படுகிறது
சங்கம் பிளாக்மெயில் செல்வதாக அரசுத் தரப்பு வாதமாக முன்வைக்கிறது. அரசின் வழக்கறிஞர் ராம்கி தனியார் நிறுவன வழக்கறிஞராக செயல்படுகிறார். எவ்வித அடிபடையின்றி சங்கத்தை விமர்சிக்கிறார். சம்பள குறைப்பு, உழைப்பு சுரண்டல், கார்ப்பரெட்டுக்கு சாதமாக செயல்பட வேண்டும் என அரசு நினைக்கிறது. ராம்கி நிறுவனத்தின் மீது அதன் உரிமையாளர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
முதலமைச்சரும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கடந்த காலங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களின் பணிநீக்கத்தை கண்டித்து கேள்வி எழுப்பி உள்ளனர். தேர்தல் வாக்குறுதியையும் முதலமைச்சர்தான் அளித்தார். அதனைத்தான் நாங்கள் திருப்பி கேட்கிறோம். கடந்த கால ஆட்சியை செய்வதையே நீங்களும் செய்வதற்கு நீங்கள் எதற்கு? அமைச்சர் சேகர்பாபு தேர்தல் வாக்குறு அளிக்கப்படவில்லை என்று கூறுவதன் மூலம் திமுகவுக்கு எதிராகவே அவர் செயல்படுகிறார் எனத் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ