முதலமைச்சராக இருக்கும்போது பிரதமர் மோடி என்ன பேசினார்?

';


மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசின் பாரபட்சத்துக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

';


டெல்லியில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்தபோது பிரதமர் மோடி என்ன பேசினார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

';


காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி என்ன பேசினார்? என்ற வீடியோவும் இப்போது திமுக எம்பி கனிமொழி பகிர்ந்துள்ளார்.

';


அதில் "ஒவ்வொரு ஆண்டும் குஜராத் மாநிலம், மத்திய அரசுக்கு ரூ. 60,000 கோடியை வரியாக கொடுக்கிறது. அதற்கு ஈடாக மத்திய அரசு என்ன திரும்பத் தருகிறது? 8,000 கோடி, பத்தாயிரம் கோடி.

';


நாங்கள் திருப்பிக் கொடுக்கிறோம், போதுமான நிதியை திருப்பிக் கொடுக்கிறோம் என்கிறது மத்திய அரசு. நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா? உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா?" என ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

';


மேலும், பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது பதிவிட்ட ட்வீட்களும் தற்போது பகிரப்பட்டு வருகின்றன. கடந்த 2012ஆம் ஆண்டு மோடி பதிவிட்ட ட்விட்களில், "குஜராத் மக்கள் 60,000 கோடியை அனுப்புகிறார்கள், அதற்கு ஈடாக என்ன திரும்ப வருகிறது?

';


குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா? நாங்கள் பிச்சைக்காரர்களா?, டெல்லியின் தயவில் வாழ்கிறோமா? பிரதமரின் மொழி அவர் வகிக்கும் பதவிக்கு உகந்தது அல்ல" என்றெல்லாம் கடுமையாக பேசியிருக்கிறார்.

';


அப்படி பேசிய பிரதமர் மோடி, இப்போது மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் இவ்வளவு பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று இப்போது முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின், சித்தராமையா, பினராயி விஜயன் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

';

VIEW ALL

Read Next Story