AIADMK Latest News: அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்து நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செல்லாதது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுக்குறித்து பார்ப்போம்.
எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்து
அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு சைவ மற்றும் அசைவ உணவுகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விருந்தளித்தார். பாஜக கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலை அதிமுக எதிர்கொள்ள உள்ளது. இந்தநிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமி இரவு விருந்து கொடுத்தார்.
எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தின் உணவு பட்டியல்
இந்த விருந்தில் மட்டன் பிரியாணி, சிக்கன் சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு ஆகிய ஏழு வகையான அசைவ உணவுகளும், இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, தோசை, சாதம், சாம்பார், ரசம், பொரியல், அவியல் என சைவ உணவுகளும் இடம் பெற்றிருந்தன.
எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தில் பங்கேற்றது யார்?
இந்த இரவு விருந்தில் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன், மூத்த தலைவர்கள் பொன்னையன், தம்பிதுறை, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல ஆர்.பி. உதயகுமார், எஸ்.பி. வேலுமணி, வளர்மதி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்பிக்களும் பங்கேற்றனர். பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் அமர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் உணவருந்தினார்.
செங்கோட்டையன் புறக்கணிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த இரவு விருந்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. கடந்த சில நாட்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை சொல்லுவதை செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து டெல்லி சென்று அமித் ஷாவை தனியாக சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க செங்கோட்டையனை வைத்து பாஜக காய் நகர்த்துவதாகவும் பேசப்பட்டது. இதை அடுத்து சென்னை வந்த அமித்ஷா, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை உறுதி செய்த நிலையில், செங்கோட்டையனையும் சமரசம் செய்து வைத்ததாக கூறப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் மீண்டும் மோதலா?
இதனயடுத்து ஈரோட்டில் கடந்த வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்ததாக கூறினார். அதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி அளித்த விருந்தில் செங்கோட்டையன் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே பனிப்போர் ஏற்பட்டு உள்ளதா? இல்லை ஏதாவது அவசரக் காரணம் காரணமாக பங்கேற்க வில்லையா? என்பது அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க - எடப்பாடி பழனிச்சாமி உடன் பேசிய செங்கோட்டையன்! முடிவுக்கு வரும் பனிப்போர்!
மேலும் படிக்க - எடப்பாடி பழனிசாமிக்கு விரைவில் மிகப்பெரிய பிரச்சனை வரப்போகுது - டிடிவி தினகரன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ