PTR Palanivel Thiyagarajan News : தமிழ்நாடு அரசின் 2025-26க்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சுமார் 2.40 நிமிடங்கள் அவர் முழுமையாக பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். இதில் தமிழ்நாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவித்தார். அப்போது அவையில் முன்னாள் நிதியமைச்சராக இருந்தவரும் இப்போது தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும் இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறாரா? என கேமராவில் பலரும் தேடினர். ஒவ்வொரு முறையும் நிதியமைச்சரைக் கடந்து பேரவையில் இருந்த முதலமைச்சர் உள்ளிட்ட மற்ற அமைச்சர்கள் கேமராவில் காண்பிக்கப்பட்டபோதும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முகம் மட்டும் தென்படவில்லை.
இதனால் பலருக்கும் சந்தேகமும் கேள்வியும் எழத் தொடங்கியது. நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்ற உலகளவில் பல நிதித்துறை சார்ந்த ஆளுமைகளுடன் தொடர்புடைய பழனிவேல் தியாகராஜன் ஏன் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பட்ஜெட் தாக்கலின்போது இல்லை என்ற ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினர். இப்படியான நேரத்தில் தான் அவரே தான் எங்கே இருக்கிறேன் என தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை போட்டார். அப்போது தான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏன் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்ற விவரம் தெரிய வந்தது.
மார்ச் 22 ஆம் தேதி திமுக மத்திய அரசு செய்யப்போகும் தொகுதி மறுவரையை எதிர்த்தும், அதனால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படுவது குறித்தும் தேசிய அளவிலான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் நடத்தப்படக்கூடிய அந்த கூட்டத்தில் பங்கேற்க கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அம்மாநில அரசியல் கட்சி தலைவர்களுக்கு திமுக நேரடியாக அழைப்பு விடுத்து வருகிறது. ஏற்கனவே, ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா முதலமைச்சர்களுக்கு திமுக சார்பில் அக்கட்சி பிரதிநிதிகள் நேரடியாக சென்று அழைப்பு விடுத்திருந்தனர்.
இப்போது கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் திமுக நேரடியாக அழைப்பு விடுத்திருக்கிறது. திமுகவின் பிரதிநிதிகளாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கேரளா சென்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை நேரடியாக சந்தித்து திமுக நடத்தும் கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்து அழைப்பு விடுத்தனர்.
இதனை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதாவது தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட இன்றைய நாளில், இன்னொரு முக்கிய பணிக்கு அவர் சென்றிருக்கிறார். இருப்பினும் அவர் நிதியமைச்சராகவே தொடர்ந்திருக்கலாம் என விரும்பும் பலரும், பிடிஆர் அல்லது திமுக திட்டமிட்டே பட்ஜெட் தாக்கல் செய்யபடும் நாளில் அவரை கேரளாவுக்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் பேசிக் கொள்கின்றனர். முடிவாக சட்டப்பேரவையில் பிடிஆர் ஏன் இல்லை என்பதற்கான பதில் அவர் திமுக பிரதிநிதியாக கேரளா முதலமைச்சரை சந்திக்க சென்றதே என்பது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2025: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? லிஸ்ட் இதோ!
மேலும் படிக்க | தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2 ஆயிரம்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









