)
Montha Cyclone, Tamil Nadu Weatherman Prediction: வங்கக் கடலில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வரும் அக். 26ஆம் தேதி (ஞாயிறு) அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கடுத்த நாள் (அக். 27) புயலாகவும் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு அக்டோபரில் உருவாகும் முதல் புயல் இதுவே
வங்கக்கடலில் உருவாகும் இந்த புயலுக்கு 'Montha' (மோந்தா) என பெயரிடப்பட்ட இருக்கிறது. மோந்தா என்ற பெயரை தாய்லாந்து பரிந்துரைத்துள்ள நிலையில், ஆங்கிலத்தில் இதன் அர்த்தம் Churning, அதாவது நுரைத்து கலக்குதல், கொந்தளிப்பது, கடைதல் என்று புரிந்துகொள்ளலாம். மோந்தா புயலால் அக். 27ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறி ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இந்த மோந்தா புயல் குறித்து எளிமையாக புரியும்படி சில விவரங்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பிரதீப் ஜான் அவரது X பக்கத்தில் இன்று மாலை 4.24 மணிக்கு போட்ட பதிவில், இந்த புதிய புயல் ஆந்திராவை நோக்கி செல்கிறது என்றும் அங்குதான் கரையை கடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 99.99999% உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த 'சக்கரம்' (குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி) பெரும்பாலும் புயலாக மாறும், மேலும் கிடைக்கக்கூடிய அடுத்த பெயர்களுடன் பெயரிடப்படும். எனவே அது சூறாவளி தீவிரத்தை அடைந்தவுடன் மோந்தா என்று பெயரிடப்படும். மோந்தாவுக்கு பின் சென்யார், தித்வா, அர்ணப், முராசு, அக்வான், காணி என உள்ளிட்ட பெயர்கள் அடுத்தடுத்த புயல்களுக்கு சூட்டப்படும் என்ற தகவல்களையும் தெரிவித்துள்ளார்.
TWM's brief update on upcoming Chakkaram in simple words for a common man
— Tamil Nadu Weatherman (@praddy06) October 24, 2025
====================
1. Landfall / Crossing area - It is going to Andhra (99.99999% confirm).
2. Will the chakkaram be named: Yes. This chakkaram will mostly become cyclone and will be named with the next… pic.twitter.com/KIi1wYgBmB
"வடக்கு தமிழ்நாட்டுக்கு அருகில் வராமல், திறந்த கடல்களில் இருந்து ஆந்திராவுக்குச் செல்லும். இதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கனமழையைத் தவறவிடும். மேலும் அது வடக்கு தமிழ்நாட்டின் கடற்கரைக்கு அருகில் வராமல் திறந்த கடலில் திரும்பினால் சாதாரண மழையை மட்டுமே பெறும்" என குறிப்பிட்டு இது முதல் சூழல் என்றும விவரித்துள்ளார்.
"வடக்கு தமிழக கடற்கரையை நெருங்கி ஆந்திராவிற்கு வளைந்து செல்லும். சக்கரம் வடக்கு தமிழக கடற்கரையை நெருங்கி ஆந்திராவிற்கு திரும்பினால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மட்டும் கனமழையை பெறும்" என குறிப்பிட்டு இதனை இரண்டாவது சூழல் என்றும் விவரித்துள்ளார்.
மேலும், சென்னை மழையை தவறிவிடுமா அல்லது இதில் இருந்து ஏதாவது பெறப் போகிறோமா என்பதை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் தெளிவுபடுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வேறு எந்த மாவட்டமும் இந்த புயலால் பயன்பெறாது என கூறும் அவர், புயல் ஆந்திராவிற்கு செல்வதால் மற்ற மாவட்டங்களில் பெரிய கனமழை பெய்யாது என்கிறார். கேரளாவில் மழை பெய்யும், கன்னியாகுமரி மற்றும் நீலகிரியிலும் கூட சற்று மழை பெய்யக்கூடும்.
தொடர்ந்து, அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாள்கள் கவனிக்க வேண்டிய நாள்கள் என்கிறார் அவர். இந்த புயல் ஆந்திராவிற்கு நகர்ந்த பிறகு, அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைக்கு முன் தமிழ்நாட்டில் நிறைய மழை பெய்யும். நவம்பர் முதல் வாரம் மந்தமானதாக இருக்கும். மழை பெய்யும் ஆனால் மந்தமான நிலை இருக்கும் என்றும் கணித்துள்ளார்.
வட தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடற்கரையில் உள்ள மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மேலும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், "நேற்றைய அதே போக்கு இன்றும் நிலவும். கன்னியாகுமரியில் இன்றும் சூப்பர்-டூப்பர் மழை பெய்யும். மேற்கு திசையில் இருந்து காற்றுடன் கூடிய மழை, நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், வால்பாறை மற்றும் நீலகிரி (பந்தலூர் - அவலாஞ்சி பகுதிகள்) போன்ற தென் மாவட்டங்களில் மழை இருக்கும். டெல்டா பெல்ட்டிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ