)
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வசித்து வந்த 25 வயதுடைய பெண் ஒருவர் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் வீட்டிற்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் கையில் வைத்திருந்த திருப்புளியால் தன்னை குத்தி விட்டு கொலை செய்து விடுவேன் என மிரட்டி வீட்டின் அறையில் உட்கார வைத்து கை, கால்களை கட்டி போட்டு தனது ஆடைகளை கலைந்து ஆபாசமாக நடந்து கொண்டு தன்னை வீடியோ எடுத்து கொண்டதும் மேலும் வீட்டில் வைத்திருந்த நகைகளை திருடிக் கொண்டு சென்றவர்.
இதுகுறித்து புகார் அளித்தால் நிர்வான வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் விட்டு விடுவேன் என மிரட்டி விட்டு சென்றதாக புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் சாய் கணேஷ் தலைமையில் தனிப்படைகள் அமைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அஜய்குமார்(25), என தெரியவந்த நிலையில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வைத்து அஜய் குமாரை போலீசார் கைது செய்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், பட்டப்படிப்பு முடித்த அஜய்குமார் பல்வேறு தொழில்கள் செய்து வந்த நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டு ரூ.9 லட்சம் வரை கடன் இருந்து வந்ததாகவும் மேலும் குடிப்பழக்கம் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அந்த கடனையும் அடைப்பதற்கு கடந்த சில மாதங்களாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட வேண்டும் என முடிவு செய்திருந்தார்.
இதற்காக கடந்த கொரோனா காலத்தில் நசரத்பேட்டையில் குடும்பத்துடன் தங்கியிருந்த போது அந்த பகுதிக்கு சென்று திருடலாம் என முடிவு முடிவு செய்து நண்பரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு வேலைக்கு இன்டர்வியூ செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு பூந்தமல்லியில் ஒரு பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஆட்டோ மூலம் நசரத்பேட்டைக்கு சென்று அந்த பெண்ணின் வீட்டில் புகுந்து மிரட்டி பாலியல் சீண்டல் கொடுத்து தனது கையால் நகைகளை எடுத்தால் போலீசார் கைரேகைகளை பதிவு செய்து விடுவார்கள் என அந்த பெண்ணின் கையாலேயே வீட்டில் இருந்த 11 பவுன் நகைகளை எடுத்து கொடுத்ததையடுத்து அங்கிருந்து மீண்டும் ஆட்டோவில் சென்று இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
மேலும் போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க மாஸ்க் மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு போலீசாருக்கு முகம் தெரியாதபடி சென்றதும் தெரியவந்தது. திருடிய நகைகள் சிலவற்றை விற்று அதில் வந்த பணத்தில் சில கடன்களை அடைத்து விட்டு உல்லாசமாக சுற்றி திரிந்ததும் மேலும் சில நகைகளை போலீசாரிடம் சிக்கிக் கொண்டால் அதன் பிறகு செலவு செய்வதற்காக மறைத்து வைத்திருந்த நிலையில் கோயம்புத்தூரில் உள்ள தனது நண்பரிடம் நகைகளை விற்று கொடுக்கும்படி அதனை கூரியர் மூலம் அனுப்பியதும் தெரியவந்தது.
போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த அஜய்குமார் செல்போன் மற்றும் நம்பர்களை மாற்றி விட்டு எங்கும் அறை எடுத்து தங்காமல் விமான மற்றும் ரயில்கள் மூலம் பயணம் செய்தபடியே இருந்துள்ளார்.
அஜய் குமார் கோவை விமான நிலையத்திற்கு சென்றது தெரியவந்த நிலையில் போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்து மறைத்து வைத்திருந்த நகைகளை எடுக்க முயன்ற போது போலீசாரின் பிடியிலிருந்து தப்பி சென்ற போது தவறி விழுந்ததில் அஜய் குமாரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அஜய்குமார் மீது பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல், திருட்டு, பாலியல் சீண்டல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடனை அடைப்பதற்காக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.