Zoho Soundbox, பிஓஎஸ் இயந்திரங்கள் அறிமுகம்: அடுத்த குறி GPay, Paytm, PhonePe

Zoho Payments: ஜோஹோ இப்போது விற்பனை மைய சாதனங்கள், அதாவது  பிஓஎஸ் இயந்திரங்களை (POS machines) விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இவற்றில் ஒருங்கிணைந்த க்யூஆர் சாதனங்கள் மற்றும் ஒலி பெட்டிகள் அடங்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 8, 2025, 03:57 PM IST
  • ஜோஹோ பேமெண்ட்ஸ்ஸின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பிஓடி சாதனம்.
  • வணிகங்களுக்கான ஒருங்கிணைந்த டேஷ்போர்ட்.
  • பேடிஎம், ஃபோன்பே மற்றும் கூகிள் பே ஆகியவற்றுக்கு கடுமையான போட்டி.
Zoho Soundbox, பிஓஎஸ் இயந்திரங்கள் அறிமுகம்: அடுத்த குறி GPay, Paytm, PhonePe

Zoho Soundbox: உள்நாட்டு நிறுவனமான ஜோஹோ தற்போது மிக வேகமாக பிரபலமாகி வருகின்றது. சமீபத்தில், நிறுவனத்தின் உடனடி செய்தியிடல் செயலியான அரட்டை மிகவும் பிரபலமாகிவிட்டது. தினம் தினம் இதை லட்சக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் அதை விளம்பரப்படுத்தி வருகிறது. இப்போது, ​​ஜோஹோ நிறுவனம் வன்பொருள், அதாவது ஹார்ட்வேர் துறையில் குறிப்பிடத்தக்க வகையில் கால் பதிக்க தயார் ஆகி வருவதாகத் தெரிகிறது.

Add Zee News as a Preferred Source

ஜோஹோ இப்போது விற்பனை மைய சாதனங்கள், அதாவது  பிஓஎஸ் இயந்திரங்களை (POS machines) விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இவற்றில் ஒருங்கிணைந்த க்யூஆர் சாதனங்கள் மற்றும் ஒலி பெட்டிகள் அடங்கும். தற்போது, Paytm மற்றும் PhonePe பிஓஎஸ் சாதனங்கள் இந்தியாவில் பிரபலமாக உள்ளன. இவை சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கும் மிகவும் பொதுவான கட்டண விருப்பங்களாகவும் இருக்கின்றன.

Zoho Payments

ஜோஹோ பேமெண்ட்ஸ்ஸின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிஓடி சாதனம், பேடிஎம், ஃபோன்பே மற்றும் கூகிள் பே ஆகியவற்றுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தக்கூடும். நிறுவனத்தின் ஸ்மார்ட் பிஓஎஸ் சாதனம் டச் ஸ்க்ரீன் இடைமுகம் மற்றும் ரசீதுகளை உடனடியாக அச்சிடும் உள்ளமைக்கப்பட்ட பிரிண்டரைக் (built-in printer) கொண்டுள்ளது.

ஜோஹோவின் கட்டண முனையம் 4G, WiFi மற்றும் புளூடூத் இணைப்புகளை ஆதரிக்கிறது. இந்த இயந்திரத்தின் மூலம், வணிகர்கள் சிப் கார்டுகள், UPI மற்றும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தங்கள் நிறுவனத்திற்கு இது ஒரு இயற்கையான விரிவாக்கம் என்று ஜோஹோ பேமென்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார். அந்த நேரத்தில் இது மென்பொருள் அடிப்படையிலான கட்டண தீர்வாக இருந்தபோதிலும், நிறுவனம் அனைத்து சாதனங்களிலும் ஆன்லைன் கட்டண ஆதரவை வழங்கியுள்ளது.

இப்போது, ​​நிறுவனம் வன்பொருளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறு வணிகங்களை நிர்வகிக்க தேவையான அனைத்து கருவிகளையும் ஜோஹோ கொண்டிருப்பதால், அவர்களின் ஆதரவு கட்டண முனையத்திலும் கிடைக்கும். இதன் பொருள் வணிகர்கள் நிகழ்நேர கட்டண கண்காணிப்பு முதல் கணக்கியலை முடிப்பது வரை அனைத்தையும் ஒரே இடத்தில் அணுக முடியும்.

வணிகங்களுக்கான ஒருங்கிணைந்த டேஷ்போர்ட்

வணிகங்களுக்கான ஒருங்கிணைந்த டேஷ்போர்டும் இதில் உள்ளது, இது சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் பணம் செலுத்துதல் மற்றும் பில்லிங் பற்றிய அனைத்து தகவல்களையும் எளிதாக அணுக அனுமதிக்கிறது. மேம்பட்ட பாதுகாப்பிற்காக ஜோஹோ PCI DSS சான்றளிக்கப்பட்டுள்ளது.

பிரபலமாகும் அரட்டை செயலி

இந்தியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உடனடி செய்தியிடல் செயலி வாட்ஸ்அப் ஆகும். ஆனால் இப்போது உள்நாட்டு செயலியான ஜோஹோவின் அரட்டை செயலி வந்துவிட்டது. இந்த செயலி சேட்டிங் தவிர அழைப்புகள் மற்றும் சந்திப்புகள் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது. இதுவரை, சேட்டிங்கிற்கு அரட்டை செயலி முழுமையான குறியாக்கத்தை வழங்கவில்லை, ஆனால் விரைவில் முழுமையான குறியாக்கம் செயல்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

சேட் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கான முழுமையான குறியாக்கம் தங்கத் தரமாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறியாக்கம் செயல்படுத்தப்பட்டவுடன், அரட்டை செயலியில் உள்ள அரட்டைத் தரவை யாரும் அணுக முடியாது. குறியாக்கம் இல்லாமல் சேட் செய்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால், தனிப்பட்ட தரவை ஹேக்கர்கள் அல்லது நிறுவனமே அணுக முடியும்.

வாட்ஸ்அப் நீண்ட காலமாக முழுமையான குறியாக்கத்தைக் கொண்டுள்ளது, இது பல முறை சுயாதீன பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட அரட்டை செயலி  வரும் நாட்களில் வாட்ஸ்அப் செயலியுடன் எவ்வாறு போட்டியிடுகிறது என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

மேலும் படிக்க | Whatsapp -இல் கூட இல்லாத 7 அம்சங்கள் அரட்டை செயலியில்.... அரட்டை அடிக்கலாமா?

மேலும் படிக்க | அரட்டை செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News