Ayushman Card: ஆயுஷ்மான் கார்டு ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

Ayushman Card : நாடு முழுவதும் இருக்கும் வயதானவர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஆயுஷ்மான் கார்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 16, 2025, 08:05 PM IST
  • ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம்
  • முதியவர்களுக்கு இலவச காப்பீடு கிடைக்கும்
  • ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவுகளை பார்த்துக் கொள்ளலாம்
Ayushman Card: ஆயுஷ்மான் கார்டு ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

yushman Bharat Yojana : மத்திய அரசு வயதானவர்கள் வயதான காலத்தில் எதிர்கொள்ளும் ஆரோக்கிய பிரச்சனைகளை சமாளிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் நிதிப்பற்றாக்குறைக்கு உதவும் வகையில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து முதியவர்கள் ஆயுஷ்மான் கார்டு பெற்றுக்கொண்டால் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கார்டுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

ஆயுஷ்மான் கார்டு பெறுவது எப்படி? 

- ஆயுஷ்மான் கார்டைப் பெற, முதலில் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmjay.gov.in -க்குச் செல்ல வேண்டும்.
- அந்த வெப்சைட்டில், இங்கே பல ஆப்சன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் ‘PMJAY for 70+’ ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.
- இதற்குப் பிறகு, ‘Enrol for PMJAY for 70+’ என்ற ஆப்ஷன் இருக்கும். அதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பின்னர், உங்கள் ஆதார் அட்டை விவரங்களை இங்கே கொடுத்து, அதனை வெரிஃபை செய்ய வேண்டும்.
- ஆதார் சரிபார்ப்புக்கு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை நீங்கள் இங்கே உள்ளிட வேண்டும். இப்போது, ஆதார் வெரிஃஇகேஷன் முடியும்.
- அதற்கு பிறகு அங்கே கேட்கப்படும் உங்கள் ஆவணங்களை இங்கே பதிவேற்றவும். அதாவது, வயதானவரின் புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- அதன் பின்னர் சப்மிட் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
- சிறிது நேரம் கழித்து, உங்கள் விண்ணப்பம் எல்லா தகுதிகளையும் பூர்த்தி செய்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நோடிபிகேஷன் காண்பிக்கும்
- அதன் பிறகு, நீங்கள் ஆயுஷ்மான் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சையைப் பெற முடியும்.

ஆயுஷ்மான் பாரத் யோஜனா முக்கியத்துவம்

ஒவ்வொரு வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு அவர்கள் பெயரில் இந்த கார்டை மகன் அல்லது மகள் பெற்று கொடுப்பது அவசியம். ஏனென்றால் 70 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் இருக்கும் என்பதால் அதற்கான சிகிச்சை செலவுகளை இந்த திட்டத்தின் மூலம் செய்து கொள்ளலாம். மத்திய அரசு கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பை பலர் இன்னும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர். 

மேலும் படிக்க | ஆதார் அட்டையில் முகவரியை நிமிடங்களில் மாற்றுவது எப்படி? எளிய ஆன்லைன் முறை இதோ

மேலும் படிக்க | பாதிக்கு பாதி விலையில் விற்பனையாகும் AC.. இப்பவே வங்கிடுங்க

மேலும் படிக்க | உங்கள் வீட்டு ஏசி வெடிக்காமல் இருக்க நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News