)
BSNL 5G: அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் - பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல்லிக்கு போட்டியாக தற்போது களமிறங்கி உள்ளது. இதனுடன் இந்த தொலைதொடர்பு நிறுவங்கள் பீதியடைய தொடங்கிள்ளது. ஏனெனில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து இப்போது அதன் பயனர்களுக்கு அதிவேக இணையத்தை பரிசளிக்க தயாராகி வருகிறது. ஆம், பிஎஸ்என்எல் நிறுவனம் கூடிய விரைவில் தனது பயனர்களுக்கு 5ஜி சேவையை வழங்க உறுதியலித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் 4ஜி டவர்களும் அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்குள் 5ஜிக்கு மேம்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம், ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ போன்ற நிறுவனங்களைப் போலவே பிஎஸ்என்எல் நிறுவனமும் தங்களின் பயனர்களுக்கு அதிவேக இணையத்தை வழங்க முடியும்.
பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை தொடங்கப்பட்டதிலிருந்து 5ஜி மேம்படுத்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையைத் தொடங்கி வைத்தார். இந்த நேரத்தில், ஏறக்குறைய 100,000 புதிய பிஎஸ்என்எல் 4ஜி மொபைல் டவர்கள் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டன. கூடிய விரைவில் கூடுதலாக 100,000 டவர்களை நிறுவும் அரசு நிறுவனம் திட்டமிடடு வருகிறது.
BSNL இன் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அதன் முழு 4G நெட்வொர்க்கும் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது C-DOT, Tejas Networks மற்றும் Tata Consultancy Services (TCS) ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்டது. இந்த சாதனையின் மூலம், தங்கள் சொந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளை உருவாக்கிய உலகின் ஐந்து நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துள்ளது.
அமைச்சர் சிந்தியாவின் கூற்றுப்படி, 4G நெட்வொர்க்கை உருவாக்குவதும், உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதை உருவாக்குவதும் எளிதானது அல்ல. TCS வெறும் 22 மாதங்களில் முக்கிய மென்பொருள், ரேடியோ அணுகல் நெட்வொர்க் (RAN) மற்றும் பிற தேவையான அமைப்புகளை வெற்றிகரமாக உருவாக்கியது என்றார்.
நாடு முழுவதும் இதுவரை பிஎஸ்என்எல்லின் உள்நாட்டு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட 92,564 மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த விரைவான முன்னேற்றம் இந்தியாவை உலகின் வேகமான 5ஜி சேவை செயல்படுத்தும் நாடாக மற்றுவது ஆகும், 5ஜி டவர்கள் 99.8% மாவட்டங்களை உள்ளடக்கியது. அமைச்சர் சிந்தியாவின் கூற்றுப்படி, பிஎஸ்என்எல்லின் 5ஜி நெட்வொர்க் சுயசார்பு இந்தியாவை நோக்கிய ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. நிறுவனத்தின் தற்போதைய 4ஜி நெட்வொர்க் ஏற்கனவே 5ஜி-தயாராக உள்ளது, எனவே டவர் மேம்படுத்தல் செயல்முறைக்கு அதிக நேரமோ முயற்சியோ தேவையில்லை என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவையின் மென்மையான வெளியீடு நடைபெறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது டிசம்பர் 2025 க்குள் டெல்லி மற்றும் மும்பையில் தொடங்கும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த அறிமுகத்தின் மூலம், பிஎஸ்என்எல் மீண்டும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ