பிஎஸ்என்எல் ரூ. 1,499 ரீசார்ஜ் பிளான்: அன்லிமிடெட் காலிங், டேட்டா... எக்கச்சக்க அம்சங்கள்

BSNL Recharge Plan: பிஎஸ்என்எல் தற்போது வெளியிட்டுள்ள மெகா ரீசார்ஜ் திட்டமானது இன்னும் 11 நாட்களில் நிறைவு பெற்றுவிடும். எனவே இன்றே சலுகையை பெறுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 20, 2025, 12:26 PM IST
  • பல நல்ல அம்சங்களும் வசதிகளும் அடங்கியுள்ளது.
  • அற்புதமான திட்டம் ஒன்றை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.
  • பயனர்களுக்கு கூடுதலாக 29 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ. 1,499 ரீசார்ஜ் பிளான்: அன்லிமிடெட் காலிங், டேட்டா... எக்கச்சக்க அம்சங்கள்

பிஎஸ்என்எல் ரூ. 1,499 ரீசார்ஜ் திட்டம்: இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல வித மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது விரைவில் 4ஜி (4G) சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 1 லட்சம் 4ஜி தளங்களை இணைக்கும் இலக்கை அடைய மிக அருகில் உள்ளது. 2025 ஜூன் மாதத்திற்கு முன் 1 லட்சம் டவர்கள் அமைக்கும் இலக்கு முடிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனமானது 4ஜி சேவையை வழங்கிவிடும் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக மிக அற்புதமான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் பல நல்ல அம்சங்களும் வசதிகளும் அடங்கியுள்ளது. அதன்படி தற்போது  பிஎஸ்என்எல் ஹோலி தமாகா என்கிற ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகையானது இன்னும் 11 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடும் அதாவது மார்ச் 31 அன்று இந்த திட்டமானது நிறைவு பெற உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. அதேசமயம் 336 நாள் திட்டத்தில் பயனர்களுக்கு 29 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படும். வாருங்கள், BSNL-ன் இந்த மலிவான ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்...

மேலும் படிக்க | Airtel ட்ரீட்.. 1.5GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. எந்த பிளான்? எத்தனை நாட்களுக்கு? 

365 நாட்கள் வேலிடிட்டி திட்டம்:
BSNL இன் இந்த ரீசார்ஜ் திட்டமானது ரூ.1,499க்கு வழங்கப்படும். முன்னதாக, இந்த திட்டத்தில் நிறுவனம் 336 நாட்கள் செல்லுபடியை வழங்கி வந்தது. தற்போது நிறுவனம் பயனர்களுக்கு கூடுதலாக 29 நாட்களுக்கு வேலிடிட்டியை அதிகரித்துள்ளது. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றிப் பேசுகையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும்.

இது தவிர, இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், மொத்தம் 24 ஜிபி அதிவேக டேட்டா போன்ற அம்சங்களை பெறலாம். இந்தச் சலுகையின் முடிவு குறித்து BSNL அதன் X தளத்தில் வழங்கியுள்ளது. எனினும் இந்த திட்டமானது மார்ச் 31, 2025 க்குப் பிறகு, செல்லுபடியாகாது.

ஹோலி தமாகா ஆஃபர்:
இது தவிர, பிஎஸ்என்எல் தனது ரூ.2,399 திட்டத்தில் பயனர்களுக்கு கூடுதல் வேலிடிட்டியை வழங்குகிறது. அதன்படி இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 395 நாட்கள் வேலிடிட்டி கிடைத்து வந்த நிலையில் தற்போது 425 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் பிற நன்மைகளைப் பற்றி பேசுகையில், இதில் இலவச தேசிய ரோமிங், தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் நன்மைகளைப் பெறலாம்.

மேலும் படிக்க | Tech Tips: ஸ்பேம் கால்கள் தொல்லையிலிருந்து விடுபட... சில எளிய டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News