Satellite Internet In India: இந்தியாவில் இணைய உலகை மாற்ற ஸ்டார்லிங்க் இண்டெர்நெட் இணைய வசதி வருகிறது. ஸ்பேஸ்எக்ஸ் உடன் ஏர்டெல் மற்றும் ஜியோ ஒப்பந்தத்திற்குப் பிறகு ஸ்டார்லிங்கின் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவை விரைவில் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவை எப்போது கிடைக்கும்? அதன் சிறப்பு அம்சங்கள் என்ன? போன்ற கேள்விகளுக்கான விடைகளை இந்த கட்டுரையில் பெறலாம்.
ஸ்டார்லிங்க் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஏர்டெல் மற்றும் ஜியோ
ஏர்டெல் மற்றும் ஜியோ இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் இணையத்தை வழங்க ஸ்டார்லிங்க் (ஸ்பேஸ்எக்ஸ்) உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதாவது, விரைவில் ஒப்புதல் கிடைத்தால், இணையத்தை இயக்க சாடிலைட்டுகளை பயன்படுத்துவதன் மூலம் மொபைல் டவர்களின் தேவையை கிட்டத்தட்ட நீக்கிவிடலாம்.
செயற்கைக்கோள் இணையத்திற்கான கட்டணம் என்னவாக இருக்கும்?
செயற்கைக்கோள் இணையத்திற்கான கட்டணம் குறித்த இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், பூட்டானின் உதாரணத்திலிருந்து இதற்கான செலவை மதிப்பிடலாம். ஸ்டார்லிங்க் பூட்டானில் இரண்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. அதில் முதலாவது குடியிருப்புக்கான லைட் திட்டம் மற்றும் இரண்டாவது நிலையான குடியிருப்புத் திட்டம் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
1. ரெசிடென்ஷியல் லைட் திட்டம் 23 Mbps முதல் 100 Mbps வரையிலான வேகத்தை வழங்குகிறது, இதன் கட்டணம் மாதத்திற்கு ரூ.3,001 ஆகும்.
2. அதேசமயம் 25 Mbps முதல் 110 Mbps வரையிலான வேகம் நிலையான குடியிருப்பு திட்டத்தில் கிடைக்கிறது, இதன் கட்டணம் மாதத்திற்கு ரூ.4,201 ஆகும்.
பூடானை விட இந்தியாவில் திட்டங்களின் விலை அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
செயற்கைக்கோள் இணைய சேவை 4ஜி அல்லது 5ஜி சேவையில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
4ஜி அல்லது 5ஜி இணையச் சேவை நெட்வொர்க் டவர்கள் மூலம் செயல்படுகிறது. எனவே இதற்கான அணுகல் குறைவாக உள்ளது. ஸ்டார்லிங்க் என்பது செயற்கைக்கோள் இணையம். எனவே இந்தச் சேவையை தொலை தூரத்தில் உள்ள பகுதிகளுக்கு எளிய இணைய சேவை கிடைக்கும் என்பதால்,அதிகமான மக்களுக்குக் கிடைக்கச் செய்யலாம்.
ஸ்டார்லிங்க் இணையத்தை மொபைலில் பயன்படுத்த முடியுமா?
ஸ்டார்லிங்க் டிஷ் மற்றும் ரூட்டர் மூலம் Wi-Fi நெட்வொர்க்கை உருவாக்குவதால், மொபைல், லேப்டாப், டிவி மற்றும் பிற சாதனங்களுடன் இணைக்க முடியும். இதனை வைஃபை நெட்வொர்க்கையும் போலவே பயன்படுத்தலாம்.
இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவை எப்போது தொடங்கும்?
ஜியோ மற்றும் ஏர்டெல் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (ஸ்பேஸ்எக்ஸ்) உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் இந்த சேவை எப்போது தொடங்கும் என்பது குறித்து தற்போது பல உறுதியான தகவல் ஏதும் இல்லை. அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கும். எனினும், விரைவில் அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தால், ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் செயற்கைக்கோள் இணைய சேவை வந்து சேரும் என்று தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | BSNL வழங்கும் மலிவான திட்டம்... ரூ.397 செலவில் 5 மாத வேலிடிட்டியுடன் 60 GB டேட்டா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









