Some Employees Still Happy: TCS நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என்ற செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சில ஊழியர்கள் இந்நிலையில் கூட நிம்மதியாக இருப்பதற்கு என்ன காரணம்? AI, Bench கொள்கை, புதிய வேலைவாய்ப்பு உதவிகள் என பல காரணங்களின் பின்னணியில் இருக்கிறது இந்த முடிவு!
பணிநீக்கம் ஏன்?
1.எதிர்காலத்தை நோக்கிய திட்டம்:
TCS நிறுவனத்தின் விளக்கத்தின் படி, இந்த பணிநீக்கம் என்பது நிறுவனம் "எதிர்கால தேவை மற்றும் மாற்றங்களைச் சமாளிக்கத் தயாராகும்" முயற்சியின் ஒரு பகுதியாகும்.
2.AI காரணமாக:
முன்பு தரமான Software சேவைகளுக்கு அதிக தேவை இருந்தது. ஆனால் தற்போது வாடிக்கையாளர் தேவைகள் மாறிவிட்டதால், இயந்திரங்கள் மூலம் சாதாரண வேலைகள் செய்யப்படுகிறதால், அந்த மாதிரியான பழைய வேலைகள் தேவையற்றதாக மாறிவிட்டன. அதனால் பணிநீக்கம் செய்ததாக தகவல்.
3.பொருளாதார சிக்கல்கள்:
உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் வாடிக்கையாளர் செலவுகள் குறைதல் ஆகியவை ஐடி துறையை பாதித்துள்ளன.
4.புதிய Bench கொள்கை:
ஜூன் 2025 முதல், TCS நிறுவன ஊழியர்கள் ஆண்டுக்கு குறைந்தது 225 நாட்கள் வாடிக்கையாளருக்காக நேரடியாக பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதாவது, 35 நாட்களுக்கும் மேலாக வேலை இன்றி “பெஞ்சில்” இருப்பவர்களுக்கு சம்பளத்திலும், பதவி உயர்விலும் அல்லது வேலைவாய்ப்பு தொடர்வதிலும் பாதிப்பு ஏற்படலாம்.
ஊழியர்கள் மகிழ்ச்சி?
TCS நிறுவனம் தெரிவித்திருப்பதின்படி, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாகவே வேலை முடிந்துவிடும் என்றோ, எந்தவொரு ஆதரவும் இல்லாமல் விலக்கப்படுவார்கள் என்றோ இல்லை. பதிலாக, அவர்கள் நலன்களை பாதுகாக்க சில ஆதரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை,
- ஓய்வு நலன்கள்: Provident Fund (PF), Gratuity, Pension போன்ற ஓய்வுக்கால நலன்கள் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு முழுமையாக வழங்கப்படும்.
- நோட்டீஸ் கால சம்பளம்: வேலைவாய்ப்பு முடிவுக்கு வருவதற்கான முன் அறிவிப்புக் காலத்திற்கு இணையான சம்பள தொகை வழங்கப்படும்.
- வேறு வேலைவாய்ப்பு உதவி: புதிய வேலை வாய்ப்புகளை பெற ஊக்கப்படுத்தும் வகையில், “outplacement assistance” எனப்படும் வேலை தேடல் ஆதரவு வழங்கப்படும்.
- காப்பீடு நீட்டிப்பு: மருத்துவக் காப்பீடு போன்ற நலத்திட்டங்கள் பணிநீக்கம் ஆன பிறகும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் ஊழியர்களுக்கு எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட வேலை இழப்பை நிதானமாக சமாளிக்க உதவ வேண்டும் என்பதே TCS-ன் நோக்கம் என கூறப்படுகிறது.
இது ஐடி துறையில் ஒரு பெரிய மாற்றமா?
ஆமாம்! TCS-இன் இந்நடைமுறை, இந்தியா முழுவதும் ஐடி துறையில் நடைபெறும் ஒரு கட்டமைப்பு மாற்றத்தை காட்டுகிறது. TCS, Infosys, HCL போன்ற நிறுவனங்கள் FY26-இன் முதல் காலாண்டில் சுமாரான வருமான வளர்ச்சி (single-digit growth) மட்டும் பதிவு செய்துள்ளன. AI-வின் வருகையால், வழக்கமான வேலைகளை ஆட்டோமேஷனில் மாற்றுவது முக்கியமாகியுள்ளது. இதனால் பாரம்பரிய வேலைகள் குறைந்து, புதிய திறமைகள் தேவைப்படுகிறது.
முடிவில்:
ஒருபுறம் வேலை இழப்பும், மற்றொரு புறம் தொழில்நுட்ப முன்னேற்றமும் நடைபெறும் இந்த சூழலில், TCS உடன் வேலை செய்யும் ஊழியர்கள் எதிர்காலத்திற்கு தயாராக, புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் தேவையுண்டு.
சுருக்கமாக்:
- TCS-ல் 12,000 ஊழியர்கள் பணிநீக்கம் – FY26-இல் 2% ஊழியர்களை நிறுவனம் நீக்கியது.
- எதிர்கால திட்டமிடலுக்கான நடவடிக்கை – மாற்றம் மற்றும் வளர்ச்சிக்குத் தயார் ஆகும் முயற்சி.
- AI காரணமாக வேலைகள் குறைவு – வழக்கமான வேலைகள் மெஷின்களால் செய்யப்படுவதால் தேவையற்றது.
- பொருளாதார மாற்றங்கள் தாக்கம் – வாடிக்கையாளர் செலவுகள் குறைவால் IT துறை பாதிப்பு.
- 225 நாட்கள் வேலை கட்டாயம் – புதிய பெஞ்ச் கொள்கை ஜூன் 2025 முதல் அமலில்.
- 35 நாட்களுக்கு மேல் வேலை இல்லையெனில் – சம்பளம், பதவி உயர்வு, வேலை தொடர்வு ஆகியவை பாதிக்கப்படலாம்.
- பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நலன்கள் – PF, Gratuity, காப்பீடு, வேலை தேடல் உதவி வழங்கப்படும்.
- ஐடி துறையில் பெரிய மாற்றம் – TCS, Infosys, HCL உள்ளிட்ட நிறுவனங்கள் குறைந்த வளர்ச்சி மட்டும்.
- AI வருகையால் திறன் மாற்றம் அவசியம் – பழைய வேலைகள் குறைந்து, புதிய திறன்கள் தேவைப்படுகிறது.
- முடிவாக – வேலை இழப்பை சமாளிக்க புதிய திறன்களை ஊழியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | நல்ல செய்தி! 40 ஆயிரம் புதிய வேலைகளை வழங்கும் இந்த நிறுவனம்
மேலும் படிக்க | "ஆண்கள் பற்றியும் சிந்தியுங்கள்" நாட்டையே உலுக்கிய மரணம்..!இப்படியுமா நடக்குது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









