கடந்த ஆண்டில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தன. இப்போது வரும் மாதங்களில் ரீசார்ஜ் திட்டங்களுக்கான கட்டணங்கள் மீண்டும் விலை உயர்ந்ததாக மாறக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மொபைல் பயனர்கள் இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்
2025 நவம்பர்-டிசம்பர் மாதங்களில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் விலைகளை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் போடவோன் ஐடியாவின், ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு மொபைல் பயனர்கள் இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்கள் உயர்த்தப்படுவதற்கான காரணம்
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரிப்பது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாகும்.அதிக வருமானம் ஈட்ட இது வாய்ப்பளிக்கும் என்றும், தங்கள் நெட்வொர்க்கை முன்பை விட சிறப்பாக மேம்படுத்தி, வாடிக்கையாளர்களூக்கு தரமான சேவையை வழங்க முடியும் என்றும் நிறுவனங்கள் கூறுகின்றன.
தனியார் நிறுவனங்கள் வழங்கும் 5G சேவை
கடந்த ஆண்டும் நிறுவனங்கள் தங்கள் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை விலை உயர்த்தின. தனியார் நிறுவனங்கள் 5G சேவையைத் தொடங்கியபோது, மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை. அத்தகைய சூழ்நிலையில், நிறுவனங்கள் இப்போது தங்கள் ரீசார்ஜ் திட்டங்களை விலை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.
5G சேவை மற்றும் பிற செலவுகள்
ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் அதிகரிப்பதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். இதில், நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் 5G நெட்வொர்க்கை விரிவுபடுத்தவும், தொழில்நுட்ப செலவுகளைச் சமாளிக்கவும் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டும். அதற்கான ஸ்பெக்ட்ரம் வாங்குவதற்கும் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஆகும் செலவு கணிசமாக அதிகரிக்கக்கூடும் எனவே கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என கூறப்படுகிறது.
பல மலிவான ரீசார்ஜ் திட்டங்களும் உள்ளன
ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. இதில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டங்களில் நீங்கள் நீண்ட செல்லுபடியாகும் தன்மை, வரம்பற்ற தரவு, தினசரி இலவச எஸ்எம்எஸ் மற்றும் OTT தளத்தின் சந்தாவை இலவசமாகப் பெறுவீர்கள். சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களில் இலவச கிளவுட் சேமிப்பகத்தையும் வழங்குகின்றன. இதுபோன்ற அனைத்து திட்டங்களையும் பற்றிய முழுமையான தகவல்களை நீங்கள் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலிருந்து பெறலாம். இதற்குப் பிறகு உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப சிறந்த திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
மேலும் படிக்க | Reliance Jio... IPL ரசிகர்களுக்கு ஜாக்பாட்... 200 GB டேட்டாவுடன் இலவச ஜியோஹாட்ஸ்டார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ