Indo-Pak War: பாதுகாப்பு செயலிகள், அவசர நேரத்தில் உடனடி உதவி பெறலாம்

India-Pakistan War: சிறந்த பாதுகாப்பு செயலிகள் நமது பாதுகாப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலிகள் மூலம் அவசர காலங்களில் உதவி எளிதாக பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 9, 2025, 04:32 PM IST
  • ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் தொடுத்து பதிலடி கொடுத்தது.
  • மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
  • இந்த செயலியின் சேவையை இந்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
Indo-Pak War: பாதுகாப்பு செயலிகள், அவசர நேரத்தில் உடனடி உதவி பெறலாம்

Smartphone Safety Apps: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகளை இந்தியா ஆயுதப்படை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் தொடுத்து பதிலடி கொடுத்தது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நேற்று முன்தினம் இரவு இந்தியாவின் 15 நகரங்களின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் தொடுக்க முயற்சித்தது, நேற்றிரவும் ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால், இவை அனைத்தும் இந்தியாவால் முறியடிக்கப்பட்டது. 

இருப்பினும், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து பீரங்கி தாக்குதலை மேற்கொண்டு தான் வருகிறது. இதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்திய ஆயுதப் படைகள் வியாழக்கிழமை முறியடித்தன.

இத்தகைய சூழ்நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் முக்கியமாகும். அந்தவகையில் அவசரகால சூழ்நிலைகளில் உங்களுக்கு உதவக்கூடிய சில சிறந்த பாதுகாப்பு செயலிகளைப் பற்றி இன்று நாம் இந்த கட்டுரையில் காணப் போகிறோம்.

112 இந்தியா செயலி (Emergency Response Support System):
இந்த செயலியின் சேவையை இந்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் அவசரகால பதில் அமைப்பு குடிமக்களுக்கு உதவுகிறது. அவசரநிலை ஏற்பட்டால், இந்த செயலியைப் பயன்படுத்தி, 112 ஐ அழைப்பதன் மூலமோ, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமோ அல்லது வலை போர்டல் வழியாகவோ உடனடி உதவியை பெறலாம்.

CitizenCOP செயலி உதவும்:
இந்த செயலி மூலம், பயனர்கள் குற்றங்களை பெயர் குறிப்பிடாமல் புகாரளிக்கலாம். இது தவிர, இந்த செயலி நிகழ்நேர விழிப்பூட்டல்களைப் பெறுவதற்கான சேவையையும் வழங்க உதவுகிறது. இந்த செயலி மூலம், பயனர்கள் SOS எச்சரிக்கை, அவசர அறிக்கையிடல் மற்றும் இருப்பிடப் பகிர்வு போன்ற சேவைகளைப் பெறுவார்கள்.

Sachet ஆப்:
உண்மையில், இந்த செயலி மூலம் எந்தவொரு பேரழிவு குறித்தும் முன்கூட்டியே எச்சரிக்கை பெற உதவும். குடிமக்களுக்கு நிகழ்நேர பேரிடர் எச்சரிக்கைகளை வழங்குவதற்காக இந்த செயலியை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த செயலியைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் தற்போதைய இருப்பிடத்திற்கான விழிப்பூட்டல்களை எளிதாகப் பெறலாம்.

மேலும் படிக்க | Call Merging Scam : ஒரே அழைப்பு மூலம் உங்கள் வங்கி டெபாசிட்டை காலியாக்க முடியும் - உஷார்

மேலும் படிக்க | இனி Heart Attack வருவதற்கு முன்பே எச்சரிக்கை பெறலாம்.. இந்த சிப் ஒன்று போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News