காருக்குள் ஏசி போட்டு தூங்கலாமா?

';

டாக்ஸி ஓட்டுனர்கள், கார்களில் ஏசியை போட்டுவிட்டு அப்படியே தூங்கி விடுகின்றனர். இப்பழக்கம் நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.

';

இதனால் மூச்சுத் திணறல் வரும் அபாயம் அதிகமாக உள்ளது என ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் எத்தரித்துள்ளனர்.

';

ஏசி ஒரு எலக்ட்ரானிக் இயந்திரம். ஆதலால், இதனை அனைவரும் கவனமுடன் கையாள வேண்டியது அவசியமாகும்.

';

கார் என்ஜின் இயக்கத்தில் இருக்கையில் வெளிப்படும் புகையில் கார்பன் மோனாக்ஸைடு கலந்திருக்கும்.

';

இவ்வாறு வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்ஸைடு, காரின் அடிப்பகுதியின் வழியாக உள்ளே நுழைய அதிக வாய்ப்புள்ளது.

';

காருக்குள்ளே வருகின்ற கார்பன் மோனாக்ஸைடை நாம் சுவாசித்தால், இரத்தத்தில் இருக்கும் திசுக்களுக்கு ஆக்ஸிஜனின் அளவு குறைவாகக் கிடைக்கும்.

';

இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், அது உயிரைப் பறிக்கும் எமனாக மாறி விடும்.

';

காரில் ஏசியை ஆன் செய்து தூங்குவதாக இருந்தால், வெளியில் இருந்து காற்று சிறிதளவு உள்ளே வருகின்ற வகையில் கண்ணாடியை சற்று இறக்கி வைக்க வேண்டும்.

';

வெளியில் இருந்து காற்று உள்ளே வரும் போது, கார்பன் மோனாக்ஸைடினால் உண்டாகும் நச்சுப் பாதிப்பு சற்றேனும் குறையும். மேலும், நிறுத்தப்பட்டுள்ள காரில் ஏசியைப் பயன்படுத்தும் போது ‘ரீ சர்குலேஷன் மோடில்’ வைப்பதை தவிர்த்து விட வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story