புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் COVID-19 நோய்த்தொற்று புதிதாக, 77,266 பேருக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, கோவிட் -19 வழக்கு 33,87,501 ஆக உயர்ந்துள்ளது, இதில் 7,42,023 பேர் ஆக்டிவ் நோயாளிகள்., 25,83,948 பேர் குணம்டைந்துள்ளனர் மற்றும் 61,529 பேர் இறந்து விட்டனர்.
COVID-19 செயலில் உள்ள கேசலோட் 7,42,023 ஆகவும், 25,83,948 பேர் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர்.
குணமடையும் விகிதம் 76.28 சதவீதமாக பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் COVID-19 காரணாமான இறப்பு விகிதம் மேலும் 1.82 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்தியாவின் மொத்த COVID-19 தொற்றூ பாதிப்புகள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தை எட்டியது, ஆகஸ்ட் 23 அன்று இது 30 லட்சம் என இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தரவுகளின் படி, வியாழக்கிழமை 9,01,338 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை 3.94 கோடி பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
ALSO READ | அந்தமான் தீவு பழங்குடியினரையும் விட்டு வைக்காத கொரோனா என்னும் அரக்கன்..!!!