90 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 33 வயது இளைஞன்: மனித உருவில் மிருகங்கள் உலவும் உலகம்!!

மனித குலம் மிருகத்தை விட கேவலமானது என்பதை நிரூபிக்க அவ்வப்போது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கொடியவர்கள், காம வெறியர்கள், உணர்ச்சிகளை அடக்கமாட்டா வினோதப் பிறவிகள் வாழும் உலகில் நாமும் வாழ்கிறோம் என்று எண்ணும் போது நமக்கும் சிறிது அறுவெறுப்பாகத் தான் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2020, 12:19 AM IST
  • தேசிய தலைநகர் தில்லியில் 90 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
  • குற்றம் சாட்டப்பட்டவர் 33 வயது சோனு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
  • மூதாட்டி, அவரது வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
90 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 33 வயது இளைஞன்: மனித உருவில் மிருகங்கள் உலவும் உலகம்!! title=

தேசிய தலைநகர் தில்லியின் (Delhi) சாவ்லாவின் நஜாப்கர் பகுதியில் 90 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக தில்லி பெண்கள் ஆணையம் (DCW) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் DCW ட்வீட் செய்துள்ளது.

இந்த சம்பவம் செப்டம்பர் 7 ஆம் தேதி மாலை நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் டெல்லியின் ரெவ்லா கான்பூர் பகுதியில் வசிக்கும் 33 வயது சோனு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்த மூதாட்டி, அவரது வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக DCW தலைவர் சுவாதி மலிவால் தெரிவித்தார். அவர் பல காயங்களுக்கு ஆளானார் என சுவாதி மலிவால் கூறியுள்ளார்.

அந்த மூதாட்டியை சுவாதி மலிவால் (Swathi Maliwal) சந்தித்தபோது, ​​மூதாட்டி அழுதுகொண்டிருந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதாகவும் மலிவால் கூறினார். தான் அந்த நபரின் பாட்டிக்கு ஒத்த வயதுடையவள் என்று கூறி தன்னை விட்டுவொடுமாறு தான் கெஞ்சியதாகவும் மூதாட்டி பரிதாபமாகக் கூறியுள்ளார்.

மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில், DCW, "டெல்லியின் சாவ்லா, நஜாப்கர் பகுதியில் 90 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டார். DCW தலைவர் சுவாதி மலிவால் இன்று அந்த பெண்ணை சந்தித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளது.

ALSO READ: ஆம்புலன்ஸ் வாகனத்தில் Covid நோயாளியை பலாத்காரம் செய்த ஓட்டுனர்!!

இரண்டு கி.மீ வெறிச்சோடிய பாதையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு மக்கள் கூடி, குற்றம் சாட்டப்பட்டவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.

அதன் பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில், காவல்துறை வழக்கு பதிவு செய்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 376 மற்றும் 363 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்துள்ளது.

மனித குலம் மிருகத்தை விட கேவலமானது என்பதை நிரூபிக்க அவ்வப்போது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கொடியவர்கள், காம வெறியர்கள், உணர்ச்சிகளை அடக்கமாட்டா வினோதப் பிறவிகள் வாழும் உலகில் நாமும் வாழ்கிறோம் என்று எண்ணும் போது நமக்கும் சிறிது அறுவெறுப்பாகத் தான் உள்ளது. 

ALSO READ: 20 நாட்களில் மூன்றாவது சம்பவம். உ.பி.யில் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

Trending News