Survey-ல் பங்கு கொண்டால் பணம்: இதை நம்பி மோசம் போகாதீர்கள், உஷார்!!

கால் செய்பவர்கள் முதலில் மக்களிடம் ஒரு பிராடெக்டைப் பற்றிய கணக்கெடுப்பை மேற்கொள்வதாகக் கூறுகிறார்கள். பேசுபவரின் சுய விவரங்களைப் பற்றி கேட்கிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2020, 05:54 PM IST
  • சர்வே செய்வதாகக் கூறி வரும் ஃபோன் கால்களில் எச்சரிக்கை தேவை.
  • சர்வேவில் கலந்துகொண்டால் பணம் கிடைக்கும் என்று கூறினால் அதை நம்பாதீர்கள்.
  • சர்வே தொடர்பாக அனுப்பப்படும் லிங்குகளை கிளிக் செய்ய வெண்டாம்.
Survey-ல் பங்கு கொண்டால் பணம்: இதை நம்பி மோசம் போகாதீர்கள், உஷார்!!  title=

ஒரு கணக்கெடுப்பில் கலந்துகொண்டால் போதும், பணம் கொட்டும் என்று உறுதியளிக்கும் அழைப்புகள் உங்களுக்கும் வருகின்றனவா? இவை மோசடி அழைப்புகளாக இருக்கலாம், ஜாக்கிரதை!! ஊடக அறிக்கையின்படி, இப்படிப்பட்ட பல மோசடி அழைப்புகள் குறித்த பல வழக்குகள் சமீபத்தில் பதிவாகியுள்ளன.

எப்படி ஏமாற்றுகிறார்கள்

- கால் செய்பவர்கள் முதலில் மக்களிடம் ஒரு பிராடெக்டைப் பற்றிய கணக்கெடுப்பை (Survey) மேற்கொள்வதாகக் கூறுகிறார்கள். பேசுபவரின் சுய விவரங்களைப் பற்றி கேட்கிறார்கள்.

- 5 நிமிடம் அவர்களுடன் பேசினால் அதற்கு ஈடாக வாலெட்டில் 50 ரூபாய் கொடுக்கப்படுமென கூறுகிறார்கள். இதைக் கேட்டு மக்கள் ஏமாந்து விடுகிறார்கள்.

-பேச்சு முடிந்ததும், சரிபார்ப்புக்காக ஒரு ஆவணத்தை அனுப்புமாறு மக்கள் கேட்கப்படுகிறார்கள்.

-இதன் பிறகு இணைப்பு மூலம் வங்கி கணக்கு (Bank Account) ஹேக் செய்யப்பட்டு வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுகிறது. இது ஒரு ரேண்டம் கால் என்றும் யார் வேண்டுமானாலும் இதில் மாட்டிக்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

-ஏமாற்றுபவர்கள் UPI மூலம் 50 ரூபாய் அனுப்புவதாகக் கூறுகிறார்கள்.

- இணைப்பில், விவரங்களை தானே உள்ளிடுமாறு நபர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

- அவர் இணைப்பில் விவரங்களை நிரப்பும்போது, ​​அவரது வாலெட்டுடன் இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுகிறது.

ALSO READ: Alert மக்களே: Whatsapp OTP Scam பற்றிய இந்த முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

இந்த விஷயங்களை கருத்தில் கொள்ளுங்கள்

-எந்தவொரு சர்வே காலிலும் பணம் கிடைப்பதில்லை. கணக்கெடுப்புக்கு பதிலாக பணம் கொடுப்பது பற்றி யாராவது பேசினால், எச்சரிக்கையாக இருங்கள்.

- நீங்கள் அத்தகைய அழைப்பைப் பெற்று உங்களிடம் ஆவணங்கள் கேட்கப்பட்டால், அவற்றை நீங்கள் கொடுக்க வேண்டாம். நீங்கள் அளிக்கும் ஆவணங்கள் மற்றவர்கள் உங்களை ஏமாற்ற பயன்படுத்தப் படலாம்.

- இதுபோன்ற அழைப்புகளுக்கு பதிலளிக்கும்போது கண்டிப்பாக உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் கொடுக்க வேண்டாம்.

-இப்படிப்பட்ட கால் செய்பவர்களிடம் நீங்கம் கேள்வி கேட்கத் துவங்கினால், அவர்கள் காலை கட் செய்து விடுவார்கள்.

-காலின் போதோ அல்லது அதற்கு பின்னரோ, உங்களுக்கு ஏதாவது லிங்க் அனுப்பப்பட்டால், அதைக் கிளிக் செய்ய வேண்டாம்.

- ஃபோனில் அழைக்கும் நபர், அனுப்பப்பட்ட இணைப்பில் உங்கள் அல்லது கணக்கு விவரங்களை உள்ளிடச் சொன்னால், எந்த விவரங்களையும் கொடுக்க வேண்டாம்.

-தெரியாமல் இணைப்பை நீங்கள் கிளிக் செய்து, அப்படி கிளிக் செய்யும்போது ஏதேனும் செயலி (App) திடீரென நிறுவப்பட்டால், உடனடியாக உங்கள் ஃபோனை ஃபார்மேட் செய்யவும். 

ALSO READ: BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி! விரைவில் தொடங்கப்படுகிறது 4 ஜி சேவை!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News