ஜூன் மாதம் இந்தோ-சீன எல்லையில் வன்முறை மோதல்கள் தீவிரமான பொது மற்றும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், உறவில் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை கூட்டாக இணைந்து எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக, இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது. LAC பகுதிகளில் ராணுவம் மற்றும் விமானப்படையின் கூட்டுப் பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் (LAC) பதற்றமான சூழலை தணிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, அந்தப் பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்புவதில்லை என்று இந்திய-சீன முடிவு செய்துள்ளது..!
எதிர்வரும் நாட்களில் போர் போன்ற நிலைமைகளை உருவாக்கினால், சிறந்த பயிற்சி பெற்ற, திறமையான துருப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று இந்திய ராணுவம் சீனாவை எச்சரித்துள்ளது...
இந்திய படை வீரர்களுக்கு தேச பக்தி என்பது நாடி நரம்புகளில் பாயும் ஒரு உணர்வு. இது தான் இந்தியாவின் யானை பலம். மன உறுதி இல்லாத சாக்லேட் வீரர்கள் ட்ராகனின் பலவீனம்.
போருக்கான அனைத்து வித ஆயத்தங்களையும் இந்திய சீன ராணுவங்கள் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு சிறு தூண்டுதல் கூட போரை துவக்கி விடும் என்ற பதட்டமான நிலைதான் தற்போது எல்லையில் நிலவி வருகிறது.
இந்திய ராணுவம் இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில், ஆக்கிரமிக்க நினைத்த சீன ராணுவத்திற்கு, தக்க பதிலடி கொடுத்து, ராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (LoC) பாரமுல்லா மாவட்டத்தின் ராம்பூர் செக்டரில், பல மறைவிடங்கள் இருப்பதைக் கண்டறிந்த இந்திய ராணுவம் அங்கிருந்து பெரும் அளவிலான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் மீட்டுள்ளது.
இந்திய இராணுவம் பேச்சு வார்த்தையின் மூலம் அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது என்றாலும், பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பை சீர் குலைக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் பொறுத்து கொள்ளப்பட மாட்டாது என்பதில் உறுதியாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.