NRC செயல்முறை முற்றிலும் இந்தியாவுக்கு உட்பட்டது, பங்களாதேஷுக்கு 'எந்தவிதமான தாக்கங்களும்' ஏற்படாது என வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்!
கடந்த ஆண்டு அஸ்ஸாமிற்காக வெளியிடப்பட்ட இறுதி தேசிய குடிமக்களின் பதிவு (NRC) “தகுதியற்ற நபர்களின்” பெயர்களை உள்ளடக்கியுள்ளது, இதுபோன்ற நபர்களின் விவரங்களைத் தேடுவதற்காக மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆணையர்களுக்கும் இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு குறிப்பாணையினை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்றத்தில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் திங்களன்று நான்காவது மாநிலமாக மாறியது.
இந்திய அரசாங்கத்தால் தேசிய குடிமக்கள் பதிவு (NRC) வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களில் மொத்தம் 445 பங்களாதேஷ் பிரஜைகள் இந்தியாவில் இருந்து திரும்பியதாக பங்களாதேஷின் துணை ராணுவப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மக்களின் குரலைப் புறக்கணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய கூட்டணி மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) பெரும் பின்னடைவில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை தனது மாநிலத்தில் குடிமக்களின் தேசிய பதிவு (NRC) செயல்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. NRC நாடுமுழுவதும் செயல்படுத்தப்படும் பட்சத்தில் உங்கள் குடியுரிமையினை நீங்கள் எவ்வாறு நிரூபிக்க முடியும்? என்பதை இந்த பதிவு கூறுகிறது.
டெல்லி நியூ பிரண்ட்ஸ் காலனியில் நடைப்பெற்று வரும் ஆர்பாட்டங்களுக்கு மத்தியில் டெல்லி மெட்ரோவின் சில நிலையங்கள் அடைக்கப்படுதவதாக டெல்லி மெட்ரோ தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.