குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பண்டிகைக்கான வழங்கப்படும் வேட்டி சேலைகள் இந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி முதலே சம்பந்தப்பட்ட துறையிடம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் ஆர் காந்தி தகவல் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் 65 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.