கரூரில் கடந்த அதிமுக மற்றும் திமுக ஆட்சி காலங்களில் நடைபெற்ற கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளிடம் அபராதம் விதித்து, சொத்துக்களை பறிமுதல் செய்தாலே தமிழக அரசின் ஒட்டுமொத்த கடனையும் ஆறு மாதத்திற்குள் அடைத்துவிடலாம் என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் முகிலன் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் உள்ள 10 லட்சம் கோடி ரூபாய் கடனை அடைக்க மாநிலம் முழுவதும் நடந்துள்ள கிரானைட், தாதுமணல் மற்றும் கல் குவாரி கொள்ளை மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூரில் மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி 52 கல் குவாரிகளுக்கு 120 கோடி