ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களின் கடைமடைப் பகுதியான நாகை மாவட்ட விவசாயிகள் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 19 டி.எம்.சி காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு விவசாயிகள் தங்களது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க, தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு கர்நாடக அரசிடமிருந்து உரியத் தண்ணீரப் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், மேட்டூர் அணையை இன்று திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாத நிலை உள்ளதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா