பாட்டிலுக்கு 10 வாங்கினா வேலை காலி..! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூல் செய்வது குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஒரு மதுபான பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உடனடி பணிநீக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் திடீர் ஆய்வுகள் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களிடமிருந்து வரும் புகார்களை நேரடியாக கண்காணிக்க தனி குழுவும் அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது. முதலமைச்சர் விஜய்யின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Recommended Videos