தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை மீண்டும் அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இந்த திட்டத்தின் கீழ், தகுதியான மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், இந்த மாதத்திற்கான தொகையும் தற்போது மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உதவித்தொகை திட்டம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியை தொடர உதவும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு இந்த தொகை பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. கல்லூரி கட்டணம், பயணச் செலவு, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி தேவைகளுக்கு இந்த உதவித்தொகை ஆதரவாக