)
Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் உள்ளூர் நேரப்படி, நேற்றிரவு 11.47 மணியளவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.0 ரிக்டர் என பதிவான இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 600 பேர் உயிரிழந்ததாக மற்றும் 1,500 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்நாட்டு அரசின் ஊடகமான ரேடியோ டெலிவிஷன் ஆப்கானிஸ்தான் (RTA) இந்த தகவலை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள குனர் மகாணத்தில் பாகிஸ்தான் பார்டர் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மலைகளால் சூழப்பட்ட இந்த மகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நூர்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கும் நிலையில் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் அருகே 14 கிமீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஜலாலாபாத் நகரம், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து சுமார் 119 கிமீ தொலைவில் குறிப்பிடத்தக்கது. அதே மாகாணத்தில் 20 நிமிடங்களில் இரண்டாவது நிலநடுக்கமும் பதிவாகி உள்ளது. 4.5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் 10 கி.மீ., ஆழத்தை கொண்டிருந்தது. தொடர்ந்து இதே ஆழத்தில் 5.2 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் பதிவாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், "துரதிர்ஷ்டவசமாக, இன்றிரவு (ஆக. 31 இரவு) ஏற்பட்ட நிலநடுக்கம் கிழக்கு மாகாணங்கள் சிலவற்றில் உயிரிழப்பு மற்றும் கடும் பொருள் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூர் அதிகாரிகளும் பொதுமக்களும் தற்போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மத்திய மற்றும் அருகில் உள்ள மாகாணங்களில் இருந்து ஆதரவு குழுக்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளன" என்றார்.
தொடர்ந்து ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஜமான், "முதற்கட்டமாக ஒரு கிராமத்தில் 30 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்தன. ஆனால், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. ஆனால் அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்குள் செல்வதே கடினமாக உள்ளது. எங்கள் அணியினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்" என கூறினார்.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இதேபோல் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 4000 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு தெரிவித்தது. ஆனால் இதை ஏற்க மறுத்த அமெரிக்கா, ஆப்கானிஸ்தானின் மொத்த உயிரிழப்பு 1,500 என தெரிவித்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ