Sunita Williams Salary For 9 Month Stay In Space : சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) ஜூன் 2024 முதல் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக விண்வெளியில் சிக்கித் தவிக்கும் நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் 19 ஆம் தேதிக்குள் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்ப உள்ளனர். ஆனால் அவர்கள் விண்வெளியில் அதிக காலம் தங்கியிருப்பதால் அவர்களது சம்பளம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
சம்பளம்:
பல அறிக்கைகளின்படி, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் GS-15 இன் கீழ் வருகின்றனர் அதாவது அமெரிக்காவில் இவர்கள் உயரிய பொறுப்பில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள், எனவே அவர்களின் ஆண்டு சம்பளம் ரூ .1.08 கோடி முதல் ரூ .1.41 கோடி வரை உள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், ஓய்வுபெற்ற நாசா விண்வெளி வீரர் கேடி கோல்மேனின் கூற்றுப்படி, வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோருக்கு விண்வெளியில் நீண்ட காலம் தங்கியதற்காக சிறப்பு கூடுதல் நேர சம்பளம் எதுவும் வழங்கப்படாது. என தெரிவித்துள்ளார்
அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் கோல்மன்அளித்த பேட்டியில், , "விண்வெளி வீரர்களுக்கு ஒரு வணிக பயணத்தில் எந்தவொரு உயரிய பொறுப்பில் இருக்கும் மத்திய அரசு ஊழியரை போலவே ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் தங்கள் வழக்கமான சம்பளத்தைப் பெறுகிறார்கள், கூடுதல் நேரத்துக்கு எக்ஸ்ட்ரா சம்பளம் வழங்கப்படுவது இல்லை என்று தெரிவித்துள்ளார் மேலும் நாசா போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவை கவனித்துக்கொள்கிறது என்றார்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் எட்டு நாள் பயணமாக சென்றார்கள் ஆனால் எட்டு மாதங்களுக்கு பின்பு தான் இப்போது பூமி திரும்ப இருக்கிறார்கள்.. அப்போது இந்த ஓவர் டைமுக்கு சம்பளம் கிடையாதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள கோல்மேன், "தற்செயலான செலவுகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு சிறிய தொகை உள்ளது, அவர்கள் உங்களுக்கு சட்டப்பூர்வமாக பணம் செலுத்த கடமைப்பட்டுள்ளனர்." இது தனக்கு ஒரு நாளைக்கு 4 டாலர் (ரூ .347) என்று அவர் நினைவு கூர்ந்தார்.
கோல்மேனின் தரவுகளின்படி, வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் 287 நாட்கள் தங்குவதற்கு தலா 1,148 டாலர் (சுமார் ரூ .1 லட்சம்) கூடுதல் தொகையைப் பெறுவார்கள். போயிங் ஸ்டார் லைனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் கடந்த எட்டு மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் வரும் மார்ச் 19 ஆம் தேதிக்கு முன்னர் ஸ்பேஸ் எக்ஸ் இன் crew 9 டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பள விஷயத்தை கேள்வி பட்ட மக்கள், உயிரை பணயம் வைத்து ஸ்பேசில் சிக்கியவர்களுக்கு இவ்வளவுதான் சம்பளமா? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க | இனி நடப்பதே கஷ்டம்... பூமிக்கு வந்த பின் சுனிதா வில்லியம்ஸிற்கு வரும் பிரச்னைகள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









